மௌனம்

மொழியில்லாத
முதன்மை நிலை...

ஓசையில்லாத
ஒப்பற்ற நிலை...

சிந்தனைச் சிற்பம்
செதுக்கப் படுவதை
வந்தனம் சொல்லி
வாழ்த்தும் கலை....

தேற்றல் பலசெய்து- மனதின்
ஆற்றல் பெருக்கும்
மாற்றல் உலை...

கூச்சலால் கவனிக்கப்படுவது
மனித நிலை...

மௌனத்தால் கவனிக்கப்படுவது தெய்வீக நிலை...

எழுதியவர் : m.palanivasan (28-May-12, 6:45 pm)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 182

மேலே