மௌனம்
மொழியில்லாத
முதன்மை நிலை...
ஓசையில்லாத
ஒப்பற்ற நிலை...
சிந்தனைச் சிற்பம்
செதுக்கப் படுவதை
வந்தனம் சொல்லி
வாழ்த்தும் கலை....
தேற்றல் பலசெய்து- மனதின்
ஆற்றல் பெருக்கும்
மாற்றல் உலை...
கூச்சலால் கவனிக்கப்படுவது
மனித நிலை...
மௌனத்தால் கவனிக்கப்படுவது தெய்வீக நிலை...