நான் என்பது எது
நான் யார்
கடவுளா ,
மனிதனா ,
மிருகமா !
எது நான் ,
ஆணவமா ,
அலட்சியமா
அகங்காரமா
திமிரா
கோபமா புரியவில்லை !
எது நான் ,
ஒட்டு மொத்த உடலா ,
இருதய துடிப்பா ,
மூளையின் இயக்கமா ,
இரத்த ஓட்டமா ,
உடலில் பின்னி பிசைந்துள்ள நரம்பு மண்டலமா !
எது நான் ,
சுயநலமா ,
பொதுநலமா ,
அடுத்தவருடையதை அபகரிப்பதா !
எது நான் ,
பரிவா ,
பாசமா ,
அன்பா ,
கருணையா !
எது நான்
கொடுப்பதா
கெடுப்பதா ,
எடுப்பதா !
எது நான் ,
வாழ்ந்ததா
வாழ்வதா ,
வாழவிருப்பதா !
எது நான்
பிறப்பா ,
வாழ்வா ,
இறப்பா!
நான் எனபது எதுவுமில்லை ,
நான் என்பவர் இருந்ததுமில்லை ,
நான் என்பவர் இனி இருப்பதுமில்லை !