"தாம்பரம்"

"தாம்பரம்"
என்ற பெயர் பலகையின் முன்னர் நின்றேன்;
அந்த ஐந்தெழுத்து
என் அகத்துள் ஆழமாய்ப் பாய்ந்தது.
"தாம் பரம்!", "தாம் பரம்" எனத்
தகைமையாய் "தன்னொளிர்" காட்டியது.
ஆம், "தாமே" "பரமாய்" நிறைந்த இடமோ,
"தாம்பரம்" என
என் உள்ளத்துள் ஓம்காரம் ஒலித்தது.

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (20-Jun-12, 10:25 am)
பார்வை : 174

மேலே