எனதிந்தக் கோடை...

கோடை...

வெறும் பருவம்
இல்லை.

நிறைவேறாக்
கனவுகளின் சூடு.

எல்லா இரவுகளிலும்...
விழித்திருக்கும்
மனிதனின் உருவகம்.

மழைக் காலத்தின்
ஈரம் மறுக்கப்பட்ட
உடலின் பாலை.

எப்போதாவது தெறிக்கும்
கண்களின் நீர்த் துளிகளிலும்..

ஏனோ-
வெப்பம்தான் ....
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எனதிந்தப் பருவத்தில்...
எரிந்த வானத்தோடும்...
கருகிய சிறகுகளோடும்..
என்னைக் கடந்து கொண்டிருக்கிறது

எனது பறவையின் கோடை.

எழுதியவர் : rameshalam (4-Jul-12, 4:36 pm)
சேர்த்தது : rameshalam
Tanglish : enadhindhak kodai
பார்வை : 155

மேலே