முற்றுப்புள்ளி!

ஆரம்பத்திலே அறிந்தது
என்றோ ஒருநாள்
நம்நட்பிற்கு முற்றுப்புள்ளி
உண்டு என்று
சமுதாய சூழ்நிலைகளால் !

பலமுறை அந்தபுள்ளி
காற்புள்ளியாக (கமாவாக) மாறியது!

பிரச்சனை இல்லாத
பிரியாத நட்பென்று
புகழாரம் சூட்டினாய்
பூரிப்பு கொண்டாய் !

உன்குழப்பமான முடிவுகள்
பலவற்றிருக்கு ஆலோசகனானேன்
உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள
முதன்மையானவனேன்....
என்பெயர் அறியாது
உன்னருகில் எவருமில்லை.

சபலங்கள் சிலவற்றால்
தடுமாறிய போது
தவறென்று உணர்த்தி
துணைநிற்பாய் என்றெண்ணினேன்!

மாறாக மாற்றான்போல்
தண்டித்துவிட்டாய்
முடிவுக்கு வந்துவிட்டது
முற்றுப்புள்ளியாக அந்த காற்புள்ளி,,,,,.

எழுதியவர் : (17-Jul-12, 11:54 am)
சேர்த்தது : elakkiyaselvan
பார்வை : 294

மேலே