என் கவிதை
எனக்கும் கவிதை வரும்
ஏழ்மையினை கண்டால் வரும்
எருதுபோல் உழைபோரை கண்டால் வரும்
ஆனால் எய்ப்போரை கண்டால்
கோபமாய் கொப்பளிக்கும் கவிதை
அம்மாவை பார்த்தால் வரும் அன்புதான் கவிதை
ஆசை மனைவியை பார்த்தால் வரும் காதலும் கவிதைதான்
மழையை பார்த்து வரும் மகிழ்சியும் கவிதை
மழலையின் சிரிப்பில் மயங்குவதும் கவிதைதான்
இலக்கணம் பார்த்து எழுதுவது மட்டுமல்ல கவிதை
இக்கனம் தோன்றுதலை
எளிமையாய் எழுதுவதே
என்கவிதை