கனவு !

அந்நியர்கள் கனவு காண்கின்றார்கள்,
கனவை நிஜமாக்க அறிவை தேடுகிறார்கள்,
அவர்கள் கனவை நிறைவேற்ற,
எம் மகளிர் அன்னை ஆகின்றார்கள்.

அரசு தயவில் படித்த அறிவாளிகள் பலர்,
அக்கறை பச்சைக்காக ஓடி விட்டனர்,
ஏழை வரிப்பணத்தில் இலவச கல்வி கற்ற,
இவ்வறிவாளிகள் அந்நியர் ஆகி விட்டனர்,
புது குடிமக்களென குதூகலிக்கின்றனர்,
நம் தேசியக்கீதத்தை மறந்து விட்டு,
இந்திய கடப்பிதழுடன்,
அவர்கள் இதயத்தையும் எறிந்து விட்டு,
ஏழை இந்தியனை ஏளனம் செய்கின்றனர்,
புதிய தேசிய கீதம் கற்றுக் கொண்டு,
இந்திய அன்னையை தொலைத்துவிட்டனர்.

எழுதியவர் : (9-Sep-12, 8:50 pm)
சேர்த்தது : Veeraiyah Subbulakshmi
பார்வை : 128

மேலே