[337 ] குறு குறுப் பாக்கள் ..(8 )

ஒரு குடியானவனின் புலம்பல்..

மடிமீது
தலைவைத்து
விடியும்வரை
தூங்கினோம்...
மறுநாள்
எழுந்து பார்த்தோம் ...
குடிசையைக் காணவில்லை..!
*************************************************
ஒரு அரசியல்வாதியின் அங்கலாய்ப்பு..

மானியங்களைக்
கொடுத்துதான்
மக்களைக்
காப்பாற்ற வேண்டுமா..?
மக்களை
நாடுகடத்துங்கள்..
மானியத்தைக் காப்பாற்றுங்கள் ..!
****************************************************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Sep-12, 4:05 pm)
பார்வை : 113

மேலே