பஞ்ச குட்டிகள்

நகரத்தின் மையத்திலே
நாற்புற சாலை வீதியிலே
வீட்டின் வெளியிலே
கழிவு நீர் செல்வதற்கான
பாதாள சாக்கடை பாதையிலே
பஞ்ச குட்டிகளை பார்த்தேன்...

அவைகள் பஞ்ச குட்டிகள்
மட்டுமல்ல பஞ்சத்திலே
வாழ்பவைகள்.....
இன்றைய உணவு என்னால்
வழங்கப்பட்டது .
நான் வணங்கும் இறைவா!
நான் சென்ற பிறகு
நாள் தோறும் அவைகளுக்கு
உணவளிக்க மனிதம் குன்றாத
மனிதனை அனுப்பி வை
பஞ்ச குட்டிகளின்...
பசி தீர்க்க.....

எழுதியவர் : ஹரிணிகார்த்தி (10-Oct-12, 4:22 pm)
சேர்த்தது : harinikarthi
பார்வை : 139

மேலே