ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி .

விடுதலை கேட்டவர்களை
வீதியில் நிறுத்தியது
இலங்கை !

சுதந்திரம் கேட்டவர்களை
சோகத்தில் ஆழ்த்தியது
இலங்கை !

குடும்பங்களைச் சிதைத்து
கோரத்தாண்டவம் ஆடியது
இலங்கை !

தண்ணீர்த் தீவை
கண்ணீர்த் தீவாக்கியது
இலங்கை !

ஆணவத்தின் உச்சம்
திமிரின் எச்சம்
இலங்கை !

மனிதாபிமானம் மறந்து
விலங்கானது
இலங்கை !

தமிழருக்கு வழங்கிய நிதி
சிங்களருக்குப் பயன்படுத்தும்
இலங்கை !

குரங்கின் கையில்
பூ மாலையாக தமிழர்
இலங்கை !

பாலுக்கு பூனை காவல்
தமிழருக்கு சிங்களர் காவல்
இலங்கை !

நாய் வால் என்றும் நிமிராது
குணம் என்றும் மாறாது
இலங்கை !

மன்னிக்க மாட்டார் புத்தர்
மவ்னிகளான புத்தப்பிச்சுகளை
இலங்கை !

வணங்க வேண்டாம் புத்தரை
புத்தரின் வேண்டுகோள்
இலங்கை !

புத்தரின் போதனை மறந்து
எலும்பு வாங்கி பயனேது
இலங்கை !

என்று விடியும்
ஏக்கத்தில் தமிழர்
இலங்கை !

புறத்திற்கு போடலாம் முள்வேலி
அகத்திற்கு ?
இலங்கை !

ரத்த வெறியனுக்கு
ரத்தினக் கம்பளம்
இந்தியா !

எழுதியவர் : இரா .இரவி (14-Oct-12, 6:38 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 188

மேலே