மரம் நடுவோம்
மரங்களில்
சில காய்கனி தரும்
சில நிழல் தரும்
சில மருந்துப் பொருள் தரும்
மனிதனே உன்
வாழ்நாளில் மற்றவர்களுக்கு
நீ வாரி வழங்கியதென்ன
எண்ணிப் பார்த்தால்
ஏமாற்றம் தான் மிஞ்சும்
மரங்களை நட்டாவது
உன் மன ஆதங்கத்தைத்
தீர்த்துக் கொள்ளேன்
அதன்பின்
மரங்களில் சில
உன் பெயரும் சொல்லும்
-பாரதிகண்ணம்மா