இன்றைய தற்கொலைகள் ...

நாளுக்கு நாள் அதிகரிக்குது
விலை வாசி மட்டுமல்ல !
வருங்காலத் தூண்களாம்
வாலிபங்களின் தற்கொலைகள் !

வறுமையின் விரக்தியால்
உறவுகளின் உரசலால்
தேர்வில் தோல்வியால்
காதல் முறிவால் !

சோகத்திலும் சோகம்
முடிவு எடுப்பவர் எல்லாம்
மூப்பால் முதிர்ந்தவர் அல்ல
இன்றைய இளைய நெஞ்சங்கள் !

நாளும் வரும் ஏடுகளில்
பக்கத்திற்கு ஒரு பத்தியாய்
தவறாமல் வருகிறது ஒன்றாய்
தற்கொலை தான் செய்தியாய் !

அறிவார்ந்த இளைஞர்களே
அர்த்தம் எனக்கு புரியவில்லை
தற்கொலையே வீரம் என்றால்
வாழ்ந்திடும் மற்றவர் கோழைகளா !

செய்திகள் சொல்கிறது சில
திரைப்பட காட்சியாய் என்று
உரைத்திடுவேன் ஒன்று உங்களுக்கு
படங்கள் ரசித்திட மட்டுமே !

படிக்கும் பாடங்களை விட
பார்த்திடும் படங்கள் தான்
பதிந்திடும் மனதில் என்றால்
பள்ளி கல்லூரிகளே தேவையில்லை !

உணர்ந்திடுங்கள் உங்களை
உலகிற்கு வழிகாட்டுங்கள்
உயிராய் பிறந்ததால் உலகினில்
பயிராய் வளர்ந்து பலன் தாருங்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Dec-12, 7:50 am)
பார்வை : 148

மேலே