இளம் பரிதியன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இளம் பரிதியன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 101 |
புள்ளி | : 3 |
எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்
பொய்க்கும் தருணங்களில்
ஏதோ ஒன்று
உடைந்து மேலெழும்புகிறது
ஒற்றைத் தீக்குச்சி
உரசி பட்ட தோல்விகள்
பற்றி எரிகிறது
நம்பிக்கைத் தீயில்
தொலைக்கப்பட்ட
உணர்வு நிழல்களில்
கலைந்துவிடாதது
நோக்கம் மட்டுமே
இழப்புகளை இழந்துவிட்ட
தேடல்களின் எச்சமாய்
எதிர்க்காற்று கொண்டுவந்த
சேர்த்த அபிமானங்கள்
தொலைந்து போகா
தொலைவில் தொங்குகிறது
தழுவிய தோல்விகளும்
துரத்திய வெற்றிகளும்
மீண்டுமொரு வேள்வித்தீயில்
எரித்து நான் உயிர்ப்பித்திட !!
என்றுமே இல்லை துன்பம்...
மெல்லிய மலரின் மென்மை
மேவிடு இதயம் வாட்ட
அல்லியின் அழகுக் கண்கள்
அணைத்திடு அன்பைக் காட்ட
சொல்லிடை மதுவைச் சிந்து
சுந்தர இதழ்கள் தாக்க
வல்லியின் வரவில் கண்டேன்
வானுறை இன்பம் யாவும்
பொங்கிடு அலையைப் போல
பூத்திடு சொல்லால் போர்த்தி
தங்கிடா ஆறாய் ஓடி
தழுவிடு தன்மை தாங்கி
மங்கிடா மணியைப் போல
மாசிலா நெஞ்சம் கொண்ட
இங்கிவள் இருந்தால் இன்பம்
என்றுமே இல்லை துன்பம்
அன்புடன்... இளம்... 12 04 14
இன்றைய தத்துவம்
லவ் நல்லது <3<3<3<3<3<3<3<3<3<3<3
என்றுமே இல்லை துன்பம்...
மெல்லிய மலரின் மென்மை
மேவிடு இதயம் வாட்ட
அல்லியின் அழகுக் கண்கள்
அணைத்திடு அன்பைக் காட்ட
சொல்லிடை மதுவைச் சிந்து
சுந்தர இதழ்கள் தாக்க
வல்லியின் வரவில் கண்டேன்
வானுறை இன்பம் யாவும்
பொங்கிடு அலையைப் போல
பூத்திடு சொல்லால் போர்த்தி
தங்கிடா ஆறாய் ஓடி
தழுவிடு தன்மை தாங்கி
மங்கிடா மணியைப் போல
மாசிலா நெஞ்சம் கொண்ட
இங்கிவள் இருந்தால் இன்பம்
என்றுமே இல்லை துன்பம்
அன்புடன்... இளம்... 12 04 14
பெண்மையில் அன்பு பொங்கிப்
பெருகிட உலகம் வாழ
கண்மையில் கனிவைக் கூட்டி
கருணை விழியில் தீட்டி
தண்மையில் தருவும் தோற்கத்
தழுவி இதயம் மீட்டி
உண்மையின் உருவாய் ஓங்கி
உறையும் தெய்வம் பெண்ணே
இளம்... 01 01 2013
பெண்மையில் அன்பு பொங்கிப்
பெருகிட உலகம் வாழ
கண்மையில் கனிவைக் கூட்டி
கருணை விழியில் தீட்டி
தண்மையில் தருவும் தோற்கத்
தழுவி இதயம் மீட்டி
உண்மையின் உருவாய் ஓங்கி
உறையும் தெய்வம் பெண்ணே
இளம்... 01 01 2013
தேனாம் தமிழுள் சாய்ந்தேன்!
சிந்தையில் தெளிவைத் தேடி
திரிந்திடச் சிலையைக் கண்டேன்
விந்தையாய் வீசும் காற்றாய்
விரிந்திடு வான வில்லாய்
அந்தியின் அழகு வானாய்
அரும்பிய பனியின் நீராய்
சிந்தினாள் சிந்தை உள்ளே
சிலிர்த்துயான் சிலையை மேவ
அருளினாள் செறிவை அள்ளி
அள்ளிட அவளுள் ஆழ
மருளெலாம் மறைந்தே மாள
மனமெலாம் மணக்க மங்கை
இருளற்ற இன்பம் எய்த
எரித்தனள் தானெனு மென்னை
கருகின கயமை நெஞ்சம்
கவிந்தது காவாய் வாழ்வே
தகத்தக வென்றே தாவித்
தகைத்தனள் தன்னலந் தன்னை
இகமெலாம் எனதெனு மெண்ணம்
எழுந்திடா வண்ணம் ஏவி
அகமெலாம் அருளால் ஆழ்த்தும்
அரியநற் கவிதை செய்ய
திகட்டிடா அவளுள் சே
தேனாம் தமிழுள் சாய்ந்தேன்!
சிந்தையில் தெளிவைத் தேடி
திரிந்திடச் சிலையைக் கண்டேன்
விந்தையாய் வீசும் காற்றாய்
விரிந்திடு வான வில்லாய்
அந்தியின் அழகு வானாய்
அரும்பிய பனியின் நீராய்
சிந்தினாள் சிந்தை உள்ளே
சிலிர்த்துயான் சிலையை மேவ
அருளினாள் செறிவை அள்ளி
அள்ளிட அவளுள் ஆழ
மருளெலாம் மறைந்தே மாள
மனமெலாம் மணக்க மங்கை
இருளற்ற இன்பம் எய்த
எரித்தனள் தானெனு மென்னை
கருகின கயமை நெஞ்சம்
கவிந்தது காவாய் வாழ்வே
தகத்தக வென்றே தாவித்
தகைத்தனள் தன்னலந் தன்னை
இகமெலாம் எனதெனு மெண்ணம்
எழுந்திடா வண்ணம் ஏவி
அகமெலாம் அருளால் ஆழ்த்தும்
அரியநற் கவிதை செய்ய
திகட்டிடா அவளுள் சே
பெண்மையில் அன்பு பொங்கிப்
பெருகிட உலகம் வாழ
கண்மையில் கனிவைக் கூட்டி
கருணை விழியில் தீட்டி
தண்மையில் தருவும் தோற்கத்
தழுவி இதயம் மீட்டி
உண்மையின் உருவாய் ஓங்கி
உறையும் தெய்வம் பெண்ணே
இளம்... 01 01 2013
நண்பர்கள் (6)

கார்த்திகா
தமிழ்நாடு

ராம் மூர்த்தி
ஹைதராபாத்

Vinothkumar.M
Dharmapuri
