நாகூர் அலி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நாகூர் அலி |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 25-Dec-1981 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 6 |
இணையத்தில் அரட்டை அடிப்பது என் முழுநேர வேலை.
என் இதயம்
நீ....
என் காலை
உதயம்
நீ....
என் இன்பம்
துன்பமும்
நீ....
என் கோபம்
கொஞ்சல்
எல்லாமே
நீ.....
என் மறதி
ஞாபகமும்
நீ....
என்றும்
என் வாழ்வின்
வசந்தம்
நீ....
ஆதலால்
நான்
கொண்ட
காதலால்
இங்கு
கவிதையும்
நீ....!!
மெய்யிலே மெய்யை மட்டும்
நெய்யெனப் பூசிடும் நானக்
கையிலே காஞ்சனம் இன்றி
கண்டிடும் தேசிகர் ஆனார்.
அரிதம் எங்கிலும் அரிதாய்
அரிசியும் உமியும் போல்வர்
சரிதம் படைத்த நற்சீடர்
சரி பாலா மரதானா ஆவர்.
சந்திர குலத்தைச் சுட்டும்
“சந்த்”தெனும் செல்வர் வீட்டில்
சந்தம்பல நூறு கொண்ட
செயக்கொடி பறந்திடக் கண்டார்.
விந்தை யிதுவென் றெண்ணி
விசாரித்து வந்த வேளை
உடையவர் பொன்னும் பொருளும்
அடைந்தும் ஆசை தீராதார்.
பறந்திடும் கொடிகள் நூறும்
பரவலாயவர் பெருமை பேசும்
உறவென வந்து நின்றாலே
உரிமையில் துரத்தி ஏசும்.
கள்ளமனம் சேர்த்த சொத்தில்
கஞ்சன் வாழ்வது கண்டு
பள்ள மவருள்ள மென்றே
வெள்ளி மு
சமுதாயத்தால் எற்றுக்கொள்ளப்படாத காதலை செய்துவிட்ட துக்கத்தால் காதலை விட்டு ஒதுங்க நினைக்கும் காதலனுக்கு காதலியின் வீச்சு!
___________________________________________
அதிகாரத்தால்
உள்ளம் வென்றவன்
வள்ளுவனாக
இருக்கலாம்
அஹிம்சையால்
இம்சை தருவது
நீயின்றி யாருமில்லை.
தீவிரவாதியும்
தோற்றுப்போவான்
என் தீவிர காதலுக்கு முன்.
போதிமரப்பட்டைகள் கூட
நம் காதலுக்கு
சாட்சியம் சொல்ல ஏங்கிக் கிடக்கும்
ஆசை வார்த்தைகள்
கடல் கொள்ளாமல்
அலையாய் பொங்கி
அலையவிட்டது அடுக்குமா?
இன்று துறவனைப்போல்
வேடமிட்டு புலன்களை அடக்கி
போர்த்திப்படுப்பதுமேன்?
இறைவனை மட்டும்
துணையாக்கி
அன்னையும்
பிள்ளையும்
பேசிக்கொள்ளும்
மழலை.. கவிதை..!!
அறிவியலும்
ஆன்மீகமும்
உரசிக்கொள்ளும்
பொறி.. கவிதை..!!
கண் இமைக்கும்
கரிய மைக்கும்
இடைப்பட்ட
அழகு.. கவிதை..!!
காதலனும்
காதலியும்
பரிமாறும்
மொழி.. வகவிதை..!!
பூவும்
காற்றும்
கூடிய
தீண்டல்.. கவிதை..!!
பனித்துளி
ஒளிகொண்டு
சிரிக்கின்ற
பொழுது.. கவிதை..!!
மண்ணோடு
விதைகொண்ட
போராட்டத்
துளிர்.. கவிதை..!!
மரம்விட்டு
உதிர்கின்ற
சருகுகளின்
சோகம்.. கவிதை..!!
மடைததும்பி
தெறிக்கின்ற
தண்ணீரின்
வளமை.. கவிதை..!!
நிலவொளியில்
விரிகின்ற
ஆந்தையின்
சிறகுகள்.. கவிதை...!!
நீலவானில்
சிதறிக்கிடக்கும்
வெண்மேக