அபிபாரதி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அபிபாரதி |
இடம் | : tirupur |
பிறந்த தேதி | : 15-Oct-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 1 |
மொட்டவிழும் மலரோடு
மெல்லமாய் பேசிடுமே காற்று....அந்த
மொழி அறிவாயா நீ.....!
மேனியிலே பட்டுச்சிதறும்
மழைத்துளிகள் மெதுவாய் பேசிடும்
புன்னகை மொழி புரியுமா உனக்கு.....!
நான்....
உன்னோடு பேசுகின்ற நிமிடங்களில்
உணர்கின்றேன் அந்த
உன்னதத்தை.....!
புத்தகத்தின் உள்ளே புனிதப்பொருளாய்
மயிலிறகை மறைத்து வளர்ப்போமே
அந்நினைவு மறந்திடுமா உனக்கு.....!
பம்பரம் சுற்றிடும் அழகை
பார்த்து பார்த்து இரசிப்போமே...
பருவ வயது நினைவுகள் மறக்குமா நமக்கு...!
இப்படியே வளர்ந்து வந்த நம் நட்பில்
இந்த திருமணம் மட்டும் எப்படி
இடைவெளியை தந்திட இயலும்....?
காதலும் காமமும் கலந்ததுதான்
கல்யாணவாழ்க்கை
ஏன் தவித்துக் கொண்டிருக்கிறாய்
என்று கேட்டபடியே எனக்குள்ளிருந்து
வெளியே வந்தான் அவன்...
தாகம் எடுக்கிறது என்றேன்...
தண்ணீர் குடி...
தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தவிர
வேறெதுவும் இல்லை இங்கு...
முக்கால் பாகம் தண்ணீர்
எங்கும் நிறைந்திருக்கிறது...
இந்த உலகிலும்
உன் உடலிலும்...
உன்னால்
தண்ணீரை தவிர்க்கவோ
தடுக்கவோ முடியாது என்றான்...
ஏ பித்தனே...
அணைகட்டி அடக்கி விட முடியும்...
எங்களால் முடியாதது எதுவுமில்லை என்றேன்...
மயங்கி விழுந்தது
மருத்துவராக இருந்தாலும் - முதலில்
தண்ணீர் தெளித்துதான் தட்டிஎழுப்ப வேண்டும்...
தரம் பார்ப்பதில்லை
தாகம் தீர்ப்பதில்...
நிறம் பார்
ஜாவா என்பார்கள் ....
மாயா என்பார்கள் ....
கணனியில் காலத்துக்கு ....
காலம் மாறிக்கொண்டே ....
போகிறது அதன் குணம் ....!!!
காதலில் .....
இன்று ஒன்று நாளை ஓன்று .....
என்று வாழ்பவன் ....
காதலிக்கவில்லை ......
காதலை தவறாக புரிந்தவன் ....!!!
காதல் என்பது ....
வன்பொருள் கணனிபகுதி .....
நினைவுகளும் கனவுகளும் ....
மென் பொருள் கணனி பகுதி ....!!!
+
கே இனியவன்
நவீன சிந்தனை கவிதை
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!
முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?
பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!
இடது புஜத்தில்
கவுரி காப்பு
எச்சரிக்கிறது.
வலது புஜத்தில்
வரலட்சுமி காப்பு
எதற்கும்
தயார் என்கிறது.
மணிக்கட்டில்
ஏகப்பட்ட
தெய்வங்களின்
பாது காப்பு .
பெண்ணே......
இத்தனை
காவல் இருந்தும்
அலட்சியமாய் உந்தன்
சுயமரியாதையுடன்
அடிமை கொண்டது
ஆணாதிக்க காப்பு
தாலி.
@
பட்டு பாவாடை கட்டி பட்டாம்பூச்சியாக சுற்றி திரிந்தோம்
எட்டு வயது வரை ஏழு உலகையும் சுற்றிய அளவிற்கு வளம் வந்தோம்
எண்களின் குட்டி ஊர்களின் சுற்றுபுறத்தை துளியும்
பயம் இல்லாத மனதில் குழப்பம் இல்லாத குட்டி வாழ்க்கை
சுற்றி திரிந்த வாழ்வில் எட்டி பார்த்தது இளமை
இணைந்து இனிதே திரிந்த இரு கரங்கள் பிரிந்தன
உலகை சுற்றிய இரு உள்ளம் நான்கு சுவற்றில் அடைந்திட
அவர்களின் இனிய உறவு இல்லறம் வாழ்க்கை என்ற
இருளில் மூழ்கி மூச்சிறைத்து மூழ்கி விட்டது
பாவம் முதலே தெரிந்திருந்தால் அந்த ஆதி அன்னையும்
ஆண்கள் காணாத தேசம் ஒன்றில் பெண்களை விதைத்து இருபார்