Balaji Ganesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Balaji Ganesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jan-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  9

என் படைப்புகள்
Balaji Ganesh செய்திகள்
Balaji Ganesh - நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 1:42 pm

தமிழை என்றும் காக்க
தலையையும் தானம் தருவேன் - செந்
தணலில் எரித்தால்கூட - செந்
தமிழை நானும் மறவேன்...

ஈன்றவள் தந்தது தாய்ப்பால் - அட
தமிழும் எனக்குத் தாய்ப்பால்
குறளில் குடித்தேன் முப்பால் - முத்
தமிழில் சுவைத்தேன் தேன்பால்...

என்னிலம் நன்னிலம் என்பேன் - அட
என்னுயிர் தமிழே என்பேன்
எங்கும்தமிழை விதைப்பேன் - எனை
புதைத்தாலும் தமிழாய் முளைப்பேன்...

பாரில் பலமொழி இருப்பு - அதில்
பைந்தமிழேத் தனிச் சிறப்பு
காரில் குதிக்கும் மழையும் - அட
கவிதைகள் இசைக்கும் தமிழில்...

சொல்வளம் கொண்டது தமிழாம் - இல்லை
பல்வளம் நிறைந்தது என்பேன்
தேனாய் இனிக்கும் தமிழாம் - இல்லை
அதைவிட இனிக்கும் எ

மேலும்

அருமை அருமை ,,,தமிழின் தாகம் ,,,,,,அன்புடன் சிவகவி ,,, 05-May-2014 10:46 am
தமிழ் ஒளி.............அருமை நன்பே 05-May-2014 8:15 am
தமிழ் பெருமை சொல்லி முடிக்க முடியுமோ உங்கள் தமிழ் பற்றின் கவிக்கு கருத்து சொல்லி தீறுமோ வரிகள் அத்துனையும் சிறப்பு தோழமையே :-) 14-Apr-2014 3:51 pm
உயர் தரமான உன்னத படைப்பு நன்றியில் 02-Apr-2014 12:02 pm
Balaji Ganesh - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2014 10:03 pm

பச்சை கம்பளத்தில் சிதறிய முத்துக்கள்
பசுமை தடாகத்தில் அழகிய அன்னங்கள் !

கூடியே இரைதேடும் இனத்தின் ஒற்றுமை
கூட்டம் போடுவதிலும் நம்மில் வேற்றுமை !

​ஐந்தறிவு பறவைகளின் ஐக்கியமே காட்சி
ஆறறிவு மனிதனுக்கு இதுவன்றோ சாட்சி !

பறவைகள் பாடுகிறது ஒருமைப் பாட்டை
பாடமாய் சொல்கிறது நிலைப் பாட்டை !

காணும் விழிகள் வியப்பால் விரிகின்றன
நாணும் மனிதனோ மாறிட மறுக்கின்றான் !

இனத்தில் வேறுபாடு மனத்தில் மாறுபாடு
இன்றைய மக்களின் மாறாத நிலைப்பாடு !

என்றுதான் இதயங்கள் இணைந்திடுமோ இங்கு
அன்றுதான் இன்பமும் மலர்ந்திடும் இங்கே !

தரணியில் மட்டுமல்ல தளத்திலும் மாறிடுக
பரணியும் பாடிடுவோம் பர

மேலும்

உறுதியாய் ஜெயராஜா . மிக்க நன்றி 21-Feb-2014 2:55 pm
நிச்சயம் மீரான் . மிக்க நன்றி 21-Feb-2014 2:54 pm
உண்மைதான் ஷன்மு , மிக்க நன்றி 21-Feb-2014 2:54 pm
காலம் வெல்வோம் கவி படைத்து... அருமை நண்பரே! 21-Feb-2014 2:49 pm
Balaji Ganesh - KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 12:10 am

ஒரு மௌனச் சோலைக்குள்
தற்காலிகமாய் நடைபயணம்
கைகள் நிறைய
திணிக்கப்படும் மௌனப்பூக்களோடு
வீடுதிரும்பினேன் ...

இன்னமும் வாட்டமில்லாத
அப்பூக்களை
வாசற்படிக்கு வெளியே
அலங்கரித்துவிட்டு நுழைகின்றேன்
எனக்கான வரவேற்ப்பில் முகம்சுளிப்பு !

குறுக்கு விசாரணைகளும்
குறுகிய விளக்கங்களும்
ஒன்றுக்கொன்று சமாதானமாகின்றன
அன்றைக்கு எனக்கான உணவில்
உப்புமில்லை காரமுமில்லை ...

அந்நியமாகத்
தெரிகின்றேன் அனைவருக்கும்
ஒட்டாத உறவாகவே
அனைத்தும் என்னை வெறுப்பதாய்
சலனத்தை ஒட்டிக்கொள்கிறேன் ...

பால்கனி விளிம்புகளில்
கரம்கேட்டுத் தொங்குகின்றது
முகமலர்ச்சி
காப்பாற்ற ஓடுகின்றேன்
இட

மேலும்

மிக்க நன்றிகள்....... 13-Apr-2014 7:24 pm
மிக்க நன்றிகள்............. 13-Apr-2014 7:24 pm
மிக்க நன்றிகள் கவிஜி.......... 13-Apr-2014 7:23 pm
மிக்க நன்றிகள் ராஜா..... 13-Apr-2014 7:23 pm
Balaji Ganesh - அகத்தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2014 12:29 am

புதுயுகம் தேடும் பெண்ணே
நீ புதர்களில் விழவேண்டாம்
ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று
நீ கவலைப்பட வேண்டாம்

கடவுள் கொடுத்த பாக்கியம்
பெண்ணே கருவறை தானடி
கருவை சுமக்கும் பெண்ணே
நீ கடவுள் தானடி

விழிகளில் வழிந்திடும் கண்ணீர்
வலிகளின் அடையாளம்
முயற்சிகளில்லா வாழ்க்கை
முற்றிலும் அவமானம்

வளையல் அணியும் கைகள்
வானை எட்டிப் பிடிக்கிறதே
கொலுசை அணியும் கால்கள்
விண்ணில் நடக்க துடிக்கிறதே

பட்டம் பெற்ற பெண்ணே
சிறு வட்டம் அல்ல உலகம்
சோம்பலை தூக்கி எறிந்தால்
உன் சோதனை காலம் விலகும்

அடுப்படி மட்டும் உலகல்ல
அகிலமும் உந்தன் பெயர் சொல்ல
எதிர்வரும் தடையை எதிர்கொள்ள
எழுந்து வா நீ வெல்ல

மேலும்

புதுமை பெண் பாரதியார் கருத்தில் ! 29-Jan-2014 6:56 am
அருமை தோழமையே 29-Jan-2014 12:53 am
கருவைச் சுமக்கும் பெண்ணே - நீ - கடவுள் தானடி! ....முயற்சிகள் இல்லா வாழ்க்கை முற்றிலும் அவமானம்! ..... சோம்பலைத் தூக்கி எறிந்தால் சோதனைக் காலம் விலகும்! ..... வளையல் அணியும் கைகள் வானை எட்டிப் பிடிக்கிறதே! கொலுசு அணியும் கால்கள் விண்ணில் நடக்கத் துடிக்கிறதே! ....- - எல்லாம் மனதில் பதியும் வரிகள்! மாணிக்க வரிகள்! 29-Jan-2014 12:43 am
"கருவை சுமக்கும் பெண்ணே நீ கடவுள் தாண்டி" நல்ல சிந்தனை ... 28-Jan-2014 7:28 pm
Balaji Ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2014 4:59 pm

உன் கண்ணீரும்
இனித்தது
உன்னைக்
காதலித்த பின்பு..!

மேலும்

அந்த அளவு அழ வைக்கிறதோ..! 20-Jan-2014 6:05 pm
உன்=என் - சரியா 20-Jan-2014 2:05 pm
இயற்கைதானே ... 18-Jan-2014 10:47 pm
மேலும்...
கருத்துகள்

மேலே