யுவராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  யுவராஜ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2015
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  3

என்னைப் பற்றி...

கவிஞன் அல்ல நான்
கவிதையேன்று நினைத்து கிறுக்குபவன் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்

என் படைப்புகள்
யுவராஜ் செய்திகள்
தானியேல் நவீன்ராசு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Dec-2015 8:43 am

**இன்னொரு இரவு...!**
பிணமென்றும் பாராது
பிய்த்து திண்ணும்
கழுகுகளாய் சில்லறை
வீசி
தேகம் சிதைத்திடும்
காமுகர் நாடும் சாமம்
நெருங்குகிறது...
கணிகையவள்
சாபம் பெற்றபடி...!
********
விடிந்தால் திருமணம்
குறைவதோ
இருபதாயிரம்!
மகள் வாழ்க்கை
என்னாகும்?!...
பதைத்திடும்
தாயுள்ளம்...!
********
வீசமுடிந்தது
வலைதான்... சிக்குவது
தன் வலையில்
மீனா?
சிங்களன் பிடியில்
தானா?!
புரியா புதிராய்
படகேறும் மீனவன்...!
********
"அப்பா..காலைல
நோட்டுப் புத்தகம் வாங்க
ரூ.300 வேணும்... டீச்சர்
அடிப்பாங்க...!" தேகம்
பிளந்திடும் வலிதாண்டி
தூக்கம் துறக்கும்
கூலியின் விழிகள்...!
********
துன்ப

மேலும்

வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி நட்பே :-) 27-Dec-2015 6:01 pm
வறுமையின் காயங்களை ஒவ்வொரு கட்டமைப்பும் அழகாய் சொல்கிறது.இக்கவி என்னை மிகவும் கவர்ந்தது 27-Dec-2015 11:31 am
வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி நட்பே :-) 27-Dec-2015 10:03 am
அடடா ... எண்ணம் எழில் !! என்னமா சிந்திக்குறீங்க .. குறிப்பாக அந்த மீனவன் வரிகள் நெஞ்சை நிறைத்தது !! வாழ்த்துக்கள் !! 27-Dec-2015 9:55 am
யுவராஜ் - சுரேஷ்வால்மீகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2015 5:14 pm

* எத்தனை
வருடங்களுக்குப் பிறகு
பார்த்தாலும் ,

எத்தனை
குழந்தைகள்
பெற்றபிறகு
பார்த்தாலும் ;

* அங்கே
அழகாகவே தெரிகிறாள்
காதலி ...

இங்கேதான்
அழுதுகொண்டேயிருக்கிறது
"எங்கிருந்தாலும் வாழ்க "
என்ற காதல் ...!

மேலும்

நன்றிகள் உள்ளங்களே...! 28-Dec-2015 6:42 pm
நல்ல வரிகள் 27-Dec-2015 10:52 am
அனுபவ வரிகள் !! 27-Dec-2015 10:32 am
உண்மை 26-Dec-2015 8:04 am
தானியேல் நவீன்ராசு அளித்த படைப்பில் (public) Daniel Naveenraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2015 5:28 pm

எங்கு சென்றாய்?
நீ
எங்கு சென்றாய்?!...
இதயம் கிழிந்திட...
உணர்வுகள் சிதைந்திட...
காதலெனும்
நெடுவழிப்பாதையில்
நடைப்பிணமாய் என்னை
பாதியில்
விட்டபடி
எங்கு சென்றாய்?
நீயும்
எங்கு சென்றாய்?!....
கரம் கோர்த்து
நாம்நடந்த கடற்கரையும்
இமைக் கொட்டாது
கண்டு லயித்த
முகடுகளும் கிளர்த்தும்
ஆயிரம் கேள்விகளுக்கு
நானென்ன
விடைசாற்ற?!...
அமுதமென
நினைத்திங்கு
அள்ளிப்பருகியது
திராவகந்தானோ?!...
பித்தனின் மொழியென
கிறுக்கிய கோடுகளை
மோனலிசா ஓவியமாய்
விளம்பிட்ட என்
மடத்தனத்தை
என்ன சொல்ல?!
உன் விழியின்
ஒளியினில்
நடைப்பயின்ற
வாழ்க்கையின்று
அஸ்த்தமித்து கிடக்கிறது
நித்ய அமாவாசையில்...!

மேலும்

வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி நட்பே :-) 26-Dec-2015 11:01 pm
அறுமையான கவிதை காதல் தோல்வியுற்றவரின் வலிகளை அறுமையாக கூறியுள்ளீர்... 26-Dec-2015 7:58 am
நன்றி நண்பரே...! 21-Dec-2015 5:48 pm
இணைந்த கைகள் பிரிந்து சென்றால் அணையா நெருப்பு நெஞ்சில் எரியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2015 5:42 pm
யுவராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Dec-2015 11:46 pm

நண்பர்களே நம் இணையத்திலே நான் புதிதாக இணைந்துள்ளேன்
என் கருத்துக்களையும் என் கவிதைகளையும் உங்களிடம் பகிர 100 புள்ளிகள் தேவை அதை எவ்வாறு பெறுவது??? தயவு செய்து கூறுங்கள்.,
நான் எழுதிய சிறு கவிதை உங்களுக்காய்...


உன்னை காணும் நொடியிலே
எனக்கு மரணம் என்றான் இறைவன்!!!
இப்போதே இறக்கிறேன்
என் முன் வா...

மேலும்

புள்ளிகள் உங்கள் படைப்புகளின் எண்ணிக்கையும் அவற்றிற்கு வரும் பார்வைகள் மற்றும் மதிப்பீட்டையும் பொறுத்து அமையும்.எனவே எல்லா பிரிவுகளிலும் உங்கள் படைப்புகளை சமர்பித்தால் அதன் தன்மைக்கேற்ப புள்ளிகள் பெற வாய்ப்புள்ளது,,, 27-Dec-2015 12:21 pm
யுவராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Dec-2015 11:40 pm

நண்பர்களே நம் இணையத்திலே நான் புதிதாக இணைந்துள்ளேன்
என் கருத்துக்களையும் என் கவிதைகளையும் உங்களிடம் பகிர 100 புள்ளிகள் தேவை அதை எவ்வாறு பெறுவது தயவு செய்து கூறுங்கள்.,
நான் எழுதிய சிறு கவிதை உங்களுக்காய்...


உன்னை காணும் நொடியிலே
எனக்கு மரணம் என்றான் இறைவன்
இப்போதே இறக்கிறேன்
என் முன் வா...

மேலும்

படைப்புகளை பகிர புள்ளிகள் ஏதும் தேவையில்லை நண்பா :-) 27-Dec-2015 9:41 am
யுவராஜ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
25-Dec-2015 8:24 am

காதலை பெற்றோருக்காக தியாகம் செய்வது சரியா? தவறா?

மேலும்

சரி .... வாழ்க்கை துணையாக யார் வேண்டுமானாலும் வரலாம் .. ஆனால் நாம் வாழ காரணமானவர்களை தியாகம் செய்து வாழ்வதை விட நம் வாழ்கையை பெற்றோருக்காக தியாகம் செய்யலாம் .. 25-Dec-2015 7:43 pm
சரியான காரணமின்றி பிள்ளைகளின் காதலை பெற்றோர் நிராகரிப்பது சரியா தவறா என்று திருப்பி கேள்வி கேட்கத்தான் தோன்றுகிறது..... 25-Dec-2015 2:55 pm
1. சீரலிக்கின்றனர், பொற்றோருக்காக 2. சீரழிக்கின்றனர், பெற்றோருக்காக இரண்டில் எது சரி? 25-Dec-2015 2:53 pm
ஜெய் யுவா, பெற்றோரா.. பொற்றோரா? சரி செய்யுங்கள். அன்புடன், வ.க.கன்னியப்பன் 25-Dec-2015 2:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.

இவர் பின்தொடர்பவர்கள் (2)

தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.

இவரை பின்தொடர்பவர்கள் (2)

தானியேல் நவீன்ராசு

தானியேல் நவீன்ராசு

கும்பகோணம்,தமிழ்நாடு.
மேலே