ரகுஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரகுஸ்ரீ
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jan-2019
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  10

என் படைப்புகள்
ரகுஸ்ரீ செய்திகள்
ரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2019 10:06 am

கடிகார மைதானத்தில்ஓட்டப் பந்தயம்!பந்தயக் களத்தில்இருமுட்கள்!விதிமுறைசின்ன முள்பெரிய முள்ளைதுரத்துவது!12 மணிக்கொருமுறைஒரு நொடி ஓய்வு!பந்தயப்பணம்ஒருநாள்!முதல் 6 மணி ஓட்டம்நிழவின் நிழலில்அமைதியாய்!அடுத்த 6 மணி ஓட்டம்வெயிலின் நிழலில்இளஞ்சூட்டில்!மூன்றாம் 6 மணி ஓட்டம்வெயிலின் தாக்கத்தில்!நான்காம் 6 மணி ஓட்டம்மீண்டும் நிழலின்மடியில்!நிழலின் நிழலில்தொடங்கிமடியில் உறங்கும்இடைவெளியில்முடிந்தது என்வாழ்க்கை பயணத்தில்இன்னுமொரு நாள்!

மேலும்

ரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jan-2019 12:37 pm

கண்டவள் கண்ணழகுகேட்டவள் காதழகுசிரித்தவள் சிரிப்பழகுகடந்தவள் காலழகுஇடித்தவள் இடையழகுஅடித்தவள் கையழகுஅணைத்தவள் அரவணைப்பிலழகுஇவர்கள் எல்லோரையும்ஒரு சேர துணையாய் தந்ததால்இறைவா நீயும் அழகு!

மேலும்

ரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2019 11:55 am

தூக்குங்கப்பா பாவம் புள்ள குட்டி காரருப்போல தெரியுது...என கூட்டம் கணேசனை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில்,
அவன் மனைவி "5 நிமிஷம் லேட்டான
பரவாயில்லைங்க குடியா மூழ்கப்போகுதுனு" சொல்லிக்ககுடுத்த ரெண்டே ரெண்டு சப்பாத்தி...ரோட்டில்!

மேலும்

ரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2019 11:03 am

தூரத்தில் என் தந்தை
களைப்புற கடைசிக்கட்டத்தில்
எனைநோக்கி கைகாட்டி
அருகில் வந்து எனைக்கடந்து
உறக்க  "ஓடு" என கரைந்து!

நானும் வேகம் எடுத்து
அவருடன் சில தூரம் ஓடி
அவரும் ஓட்டத்தை நிருத்தி
என் ஓட்டத்தை ரசித்து
புன்முருவல் மட்டும் சிந்தி
விடைபெற!

தனிமை ஓட்டம்
விரைவினில் பயம் தர!
மனதும் பதர!
சோதனை ஓட்டத்தில்
வேதனையை வென்றிட
தனிமையைக் கொன்றிட
எந்தை கையாண்ட
பொருப்பினை கைகொண்டு
தனிமை ஓட்டத்தின்
நடுவினில் நான்!

எனைமட்டும் இழுத்தோடி 
பலப்பல பரிசுகள் வென்றவன்
ஆதலால் இழுக்க சமமான
சரியான துணையினை
திசைக்காட்டியாய் கட்டிட
புதியவள் புதுமையில்
ஓட்டமும் சற்றேற நின்றிட
கலவியில்

மேலும்

ரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2019 6:48 pm

"அய்யோ"
என்று அலரிய மனைவியை போர்வை விளக்கி முதன் முறை கண் விழிக்கும் பறவை குஞ்சு போல் அவன் பார்க்க,
"அலாரம் அடிச்சு இரண்டு மணிநேரமாச்சு அப்படியென்ன தூக்கமோ, ஒரு பொருப்பும் இல்லாம வளர்த்துருக்காங்க உங்களை"அலாரம் அடிச்சப்ப என்னையாவது எழிப்பிருக்கலாம் என்று தன் போர்வை விளக்கி,

"ஏங்க இன்னும் ஒரு 10 நிமிஷம் கழிச்சி எழுந்து கீழே வந்துடுங்க...அவங்க வர இன்னும் 15 நிமிசம் தான் இருக்கு, வீட்டில் போட்டது போட்டாப்பல இருக்கு, எல்லா வேலையும் ஒருத்தியே பன்னனும் இந்த. வீட்டில,எங்க வேலையை அரம்பிச்சு எங்க முடிக்கப்போறனோ" என்று பரப்பரப்புடன் இறங்கி சென்ற மனைவியை,

விடுமுறை நாளான இன்றேனும் சேர்ந்து தூங்கிட

மேலும்

ரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2019 11:42 pm

இறைவன் ஒருநாள்
காணப்பெற்றான்
கண்டதும் வணங்கிட
கண்களும் நிரம்பிட!

வா, கடந்துவருவோம்
உன் கடந்தக்காலத்தில்!
கடக்கும் பொழுது
எத்தனை முறை 
எண்ணற்ற முறை 
நான் உன்னருகில் 
என்னுருவில்
கணக்கில் 
கொள்ளென்றான்!

எனை உள்ளிழுத்து
ஓர் இருட்டறையில்
என்னுடன் ஓர்
உயிரைக்கட்டி
உறிஞ்சு உன்னுதிரம்
என்றான்!

துவுங்கு 
இவளிடமிருந்து
உன் கணக்கு என்றான்!
இவள் உன்னில்
யாரென்றேன்?
என்னிலில்லை அவள்,
அவளிடமே நானென்றான்!

இனி அடுத்து என
இறைக்கூற
போதும் நிருத்து!
நீயே இவளிடம் எனில்
இறைவா!
நீயே தேவையில்லை
இனியென்றேன்!

மேலும்

ரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2019 11:44 pm

என் மகன்

மேலும்

ரகுஸ்ரீ - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2019 9:05 am

கழல் ஆடிய கண்மாயில் - இன்று
கனல் பறக்கிறது தண்ணீருக்கு வழியின்றி

புதர் புதராய் நெல் விளைந்த பூமி - இன்று
புயல் மழைக்கு குடம் வைத்து காத்திருக்கு

வெண்மேகத்தை பார்த்ததால் புன்செய் நிலம் - இன்று
விழல் விளையும் வேலையை செய்கிறது

நவினத்தின் பிடியில் சிக்கிய நன்செய் - இன்று
நாலு வகை செடி முளைத்து நாவறட்சியோடு உள்ளது

கோவினங்கள் காளையோடு குதுகலித்த ஏரி - இன்று
கோரப்பசியோடு கொடி மின்னலுக்கு பார்த்திருக்கு

அருமையான தென்றல் தரும் மரம் - இன்று
குஷ்டரோகி போலவே கருகிய மரக்கிளையுடனிருக்கு

இருந்தாலும் “தை” தை தையென வந்ததாலே - உள்ளத்
தவிப்பெல்லாம் தள்ளி வைத்து - உலக
ஓட்டத்தோடு இணைந்து

மேலும்

ரகுஸ்ரீ அவர்களுக்கு நன்றி, கருத்துரைக்கு பல பல நன்றிகள் 11-Jan-2019 10:54 pm
அருமை! 11-Jan-2019 10:27 pm
நன்றிகள் பல பல வெங்கடேசன் அவர்களே 11-Jan-2019 6:19 pm
உண்மை அண்ணா... உங்கள் கவிதை அருமை 11-Jan-2019 6:13 pm
ரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2019 10:18 am

அதிகாலை நேரத்தின்
ஆழ்ந்த உறக்கம்
திரும்பி படுக்கையில்
தசாவதாரக் கண்ணண்!

காண்பது கனவென
கண்கள் அயர்ந்தேன்
கனவொன்றும் இல்லை
திரும்பென்றான் கபடதாரி!

கண்ணா
குழலும் இல்லை
தசபுஜபராக்கிரமும் இல்லை
இக்கோலம் எதற்கென்றேன்!

இவ்வுருவமே எனதுருவம்
மற்றது மக்களுருவம்
உனக்கென என்னுருவம்
தரித்து அவதரித்தேன்!

கண்ணா
பார்கடலிலும் சீற்றமா
ஆதிஷேஷனும் ஆளில்லையா
இங்கே எதற்கென்றேன்!

உன் ஆயுளில்
அரைக் கட்டம்
கடந்தாய் இதுவரை
வாழ்ந்த வாழ்க்கையின்
வகையினை வரையறு
என்றான்!

கண்ணா
உனக்கும் அரை ஆயுள்
மதிப்பீடு எங்கனம்?
சமர்ப்பிக்க முயல்கிறேன்!

உன்னதம் மட்டுமே
நிறைவாய் இருந்ததால்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே