வெங்கடேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வெங்கடேசன்
இடம்:  செஞ்சி
பிறந்த தேதி :  02-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2018
பார்த்தவர்கள்:  880
புள்ளி:  81

என்னைப் பற்றி...

எனக்கு தெரியவில்லை என்பதே உண்மை

என் படைப்புகள்
வெங்கடேசன் செய்திகள்
வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2023 2:12 pm

பசியான நெஞ்சம்
பலமாக உண்ணும்
பழகிய உன் நினைவுகளையே ..

உள் ஓடும் காற்றும்
உன் பெயரை சொல்லும்
கனிவான புதுராகம்தான்...

உன்வார்த்தை பாடல்
அதற்காக தாளம்
இசைத்திடும் என் இதயம்தான் ...

மலராத மலரும்
நமக்காக மலரும்
எந்நாளும் புதுவசந்தம் தான்...

மேலும்

வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2022 5:40 am

புறத்தில் விடியல் இல்லை
புது வானம் பிறக்கவில்லை
அகத்தில் மட்டும் ஆயிரம் விடியல்
அத்தனையும் உன் பூமுகம்தான்

மனஇருள் சூழ இங்கு
கிரகணமே வந்தாலும்
நிமிடங்கள் கரைவதற்குள்
நின் நேசம் வந்துவிடும்

உந்தன் காதல் மறைப்பதுவும்
மேகம் நிலவை சூழ்வதுபோல்
அன்பு காற்றில் மாறிவிடும்
காதல் ஓளி வீசிவிடும்

மேலும்

வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2022 5:13 am

சுற்றமும் எதிர்பதினால்
மாற்றமும் எனக்கு இல்லை
அடினெஞ்சில் விதைத்ததினால்
ஆலாய் வளர்ந்துவிட்டாய்
அதில் ஆயிரம் நினைவுகளும்
விழுதாய் வளர்ந்ததினால்
அமைதி எனக்கு இல்லை
உன் இதயத்தை நேசிக்கிறேன்
உன் வார்த்தையை சுவாசிக்கிறேன்
உன்னிடம் தினம் யாசிக்கிறேன்

மேலும்

வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2022 4:59 am

உடல் உணர்வை மறக்குமோ
கடல் உவர்ப்பை மறக்குமோ
காலம் மாற்றத்தை மறக்குமோ
கோலம் வாசலை மறக்குமோ
ஞானம் நிலையாமையை மறக்குமோ
மௌனம் அமைதியை மறக்குமோ
மீன் நீரை மறக்குமோ
தேன் இனிப்பை மறக்குமோ
நான் உன்னையும் மறப்பனோ

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2019 8:48 am

பூவிதழில் சிதறிய பனித் துளிகளுக்கு
வாழும் காலம் சில நொடிகள்
உன் பூவிதழ் சிந்தும் புன்னகை ஒளித் துளிகளுக்கு
காலம் எழுதுவதில்லை கடைசி வரிகளை !

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய பிரியா 04-Jul-2019 3:26 pm
மிக்க நன்றி கவிப்பிரிய வெங்கடேசன் 04-Jul-2019 3:26 pm
அருமையான வரிகள் கவின் அவர்களே ... 04-Jul-2019 3:10 pm
(உன் பூவிதழ் சிந்தும் புன்னகை ) எண்ணி ரசிக்கின்றேன் .அருமை அய்யா .. 04-Jul-2019 2:41 pm
சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) sakkaraivasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jul-2019 9:30 am

சோமனவன் தாக்கத்தில்
*******************************************

மாமரக் குயிலேயென் மாமரக் குயிலே
மாமன்வரக் காத்திருக்கும் மாமரக் குயிலே
தாமதமேன் என்றென்னைக் கேட்காதே பூங்குயிலே --நீ
ஏமாந்து போகாது வந்தேனே இப்போது
சாமநேரம் பாதியேக காமபாணம் நாணிலேறி
சோமனவன் தாக்கத்தில் சேமநிலை கோருதடி !
பாமரனின் குற்றந்தனை சிறிதேனும் மன்னித்து

மேலும்

தங்கள் வருகைக்கும் பார்வையிட்டு கருத்திட்டதற்கும் நன்றிகள் பல 09-Jul-2019 5:44 pm
அருமை..! 09-Jul-2019 10:58 am
பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கடேசன் அவர்களே 04-Jul-2019 8:09 pm
சரியாகச் சொன்னீர்கள் மருத்துவரே . பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 04-Jul-2019 8:08 pm
சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) Nannadan5bd809bd54563 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jun-2019 8:20 pm

நான் தொடுக்கும் கவிப் பூக்கள்
***************************************************

தேனடை மலர்களோ தென்றலோ டுறவாட
வானிடை முழுமதியோ மோகமதைத் தூண்டிவிட
மன்மதனின் பாணங்கள் நாணேறி ஏகிவிட -- என்னவளே
நானெழுதிய கவிப்பூக்கள் மலர்ந்ததோ உனக்கெனவே !

மேலும்

தங்கள் பார்வைக்கும் ரசனைக்கும் கருத்துக்கும் நன்றி நநாடாரே 30-Jun-2019 2:59 pm
அருமை அருமை " மீன் கொடித் தேரில் மன்மதன் ஏறி ஊர்வலம் வருகின்றான்" என்ற தொனியில் காதல் கனியை கவிதையாய் புனைந்துள்ளீர் கும்தலான கவிதை. 30-Jun-2019 11:19 am
மாயனையும் பாடவேண்டும் மருகனையும் பாடவேண்டும் . ஆனால் மாயன்மீதே மனம் போகிறது. மருகன்மீதும் அவ்வப்போது மனம் போகிறது . தணல்பாறைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவரே 30-Jun-2019 10:42 am
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே 30-Jun-2019 10:40 am
வெங்கடேசன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2019 9:54 am

காமம் வந்ததா? முதலில் காதல் வந்ததா?
அறிவில் வந்ததா? இல்லை மனதில் வந்ததா?

அப்பழுக்கானது என்று சொல்லும் பெருமை பெற்றதா?
அனைத்துயிரும் அறிந்து கொள்ளும் நடுமையானதா?

உரிய போது உயிரை காக்கும் உன்னதமானதா?
ஒருதலையாய் உரிமை கோரி உயிரை கொல்வதா?

செல்வம் உள்ள மனிதருக்குள் சேர முடியாததா?
சினங்கொண்டு கவர்ந்து வந்து சேர முயல்வதா?

கனந்தோறும் மனமதனை பிதற்றச் செய்வதா?
கணக்கற்று எதிர்பாலினத்தை சிதைக்கத் துணிவதா?

பிணக்கு வர சுரக்க வைக்கும் காமக் காதலை
பிறக்கும் உயிருக்கு காட்டாமல் விரட்டி அடித்திடுவோம்.
- - - நன்னாடன்.

மேலும்

அருமையாய் பார்வையிட்டு அற்புத கருத்திட்ட அய்யா திரு. சக்கரை கவிக்கு நன்றிகள் பல நூறு. மேலும் கருத்திட்டு உற்சாகப் படுத்துங்கள் நன்றி. 14-May-2019 5:35 am
அருமையான பதிவு . தற்கால மனிதரிடத்தில் வருவது காமமும் அல்ல காதலும் அல்ல . அதெல்லாம் இலக்கிய காலத்தில் தலைவி தலைவன் உறவுகள் காதல் களவு காமம் இவை யாவையும் சரியான பாதையில் இருந்தது . தற்போது உடலில் கொழுப்பு சேர சேர அதனுடைய தூண்டுதலால் வருகின்ற புணர்ச்சி எழுச்சி . அருமையான புனைவு. இது மாதிரியான நிகழ்வுகள் நம் அடுத்த சந்ததியற்கு நேராமல் இருக்கக் கடவது என்ற தங்கள் சம்மோக அக்கறை மிகவும் நன்று நன்னடரே 13-May-2019 2:44 pm
பார்வையிட்டு கருத்திட்ட திரு வெங்கடேசன் அவர்களின் சிறந்த கருத்திற்கு நன்றிகள் பல பல 13-May-2019 11:50 am
"பிணக்கு வர சுரக்க வைக்கும் காமக் காதலை பிறக்கும் உயிருக்கு காட்டாமல் விரட்டி அடித்திடுவோம்" அருமை அண்ணா .. 13-May-2019 11:37 am
வெங்கடேசன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2019 10:38 pm

நெடும் பகை அகல நின்நெடும்
அடியை பற்றி அல்பகல் தோறும்
ஆற் றொன துயரம் களைந்திட
அரவம் சூடிய அண்ணலை ஏத்துவம்

அன்பது அவியாப் பண்பதை பெறவும்
ஆற்று மளவுக்கே துன்ப மதுநிறையவும்
அல்லல் களைந்து நல்லவை பேணவும்
விரிஇருள் பகையை வென்ற வனையேத்துவம்

கங்கை சிரசில ணிந்த கார்மேகனே
கண் ணியமிக்க கடுந் தவத்தனே
உண் ணினில் கலந்தே உறைந்தேனே
பண் ணிசைப் பாடபலந் தருவாயே !
__ நன்னாடன்

மேலும்

ஆலகால விஷம் அருந்தியதால் அவன் உடல் கரு நீலமாய் மாறியதாக கூறப்படுவதால் , கார்மேகன் என்று விளித்துள்ளேன் மற்றபடி தவறு எனில் மாற்றிக் கொள்கிறேன் திரு வெங்கட் அவர்களே பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி பல . 07-Feb-2019 6:48 pm
ஆலகால விஷம் அருந்தியதால் அவன் உடல் கரு நீலமாய் மாறியதாக கூறப்படுவதால் , கார்மேகன் என்று விளித்துள்ளேன் மற்றபடி தவறு எனில் மாற்றிக் கொள்கிறேன். ஐயா வாசுதேவன் தேசிகாச்சாரி அவர்களே பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி பல. 07-Feb-2019 6:47 pm
நண்பரே , கார்மேகம் என்று திருமாலைதான் படுவர்..... கண்ணன், ராமன் இவர்கள் நிறம் கருமையை சிவனை அப்படி போற்றியதாய் நானறியேன்... இருக்கலாம் தெரியாது ...... மற்றபடி அற்புதமான புனைவு இறைவன் மேல்..... அவர் உமக்கு பண்ணிசைத்துப்பாட பலம் தர நானும் வேண்டுவேன் .. வாழ்த்துக்கள் நன்நாடன் 07-Feb-2019 12:51 pm
அற்புதம் அற்புதம் ..சிவபெருமான் நிறம் பவளம் ..எனவே "கங்கை சிரசில ணிந்த கார்மேகனே " இன்பத்திற்கு பதிலாக "கங்கை சிரசில ணிந்த கருணைமேகனே" என இருந்தால் எப்படி இருக்கும் 07-Feb-2019 9:43 am
வெங்கடேசன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2019 2:55 pm

எண்ணியதையெல்லாம் ஈடேற்றும் விநாயகர் காரிய சித்தி மாலை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம்.
எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம்.
விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத் திட்டமிடவு

மேலும்

சைவம் -வைணவம் போற்றுவோம் சைவமும் வைணமும் என்ற நூல் இப்போது படிக்க வாங்கியுள்ளேன் மீண்டும் பக்தி இலக்கியம் மலர இறைஅருள் வேண்டுவோம் தங்கள் பார்வைக்கும் உடனடியாக கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி 31-Jan-2019 6:36 pm
நன்றி, நன்றி நண்பரே அவுடியாப்பன்.வேலாயுதம் நானும் தாங்கள் சேர்த்த இவ்விநாயகர் காரிய சித்தி மாலையை , முதல் முறையாய் ஒருமுறைப்படித்தேன் நான் வைணவன்தான், ஆயினும் விநாயகரை தினமும் முதற்கண் தொழுபவன் என் இஷ்ட தெய்வம் கணபதி. நன்றி இதை சேர்த்தமைக்கு இதை இயற்றி நமக்களித்த கச்சியப்ப முனிவருக்கு தெண்டம் சமர்ப்பிக்கின்றேன் 31-Jan-2019 5:28 pm
அருமை அய்யா...வினை தீர்க்கும் ஆண்டவனின் பாடல் ... 31-Jan-2019 4:20 pm
வெங்கடேசன் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2019 8:05 pm

சேக்கிழாரின் அழகிய வர்ணனை- - - -(திருத்தொண்டர் புராணம் - - - தடுத்தாட்கொண்ட பகுதி
*****************************************************************************************************************************

கற்பகத்தின் பூங்கோம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார் !
( நால்வரில் ஒருவரான சுந்தரரின் செயல் )

மேலும்

பெண்ணின் மென்மை பாராட்டும் சேக்கிழார் புயலைச் சொல்லியிருப்பாரா ? கயல்சுமந்து என்றிருக்குமோ ? டாக்டர் கன்னியப்பனிடம்தான் கேட்கவேண்டும் . 08-Jan-2019 9:21 am
thangal பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி. புயல் சுமந்து _= மேகத்தை தன மேலே சுமந்த காற்றைக் கூறுகிறன்றார் .மேகத்தை மேலே சுமந்து கொண்டும் வில், நீலோற்பவம் , பவளம் , தாமரைஆகியவை பூத்திருப்பதுடன் மதியும் (நிலவு ) பூத்த கொடியிடையாள் என்கிறார். இது நான் புரிந்துகொண்ட வரை . 08-Jan-2019 9:08 am
திருச்சுற்றில் தன்தலை சுற்றச் செய்த பரவை அழகில் மயங்கிய சுந்தரரைப் பற்றிய வரிகள் . இதில் புயல் சுமந்து என்று எதைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் ? 07-Jan-2019 7:07 pm
தமிழ் ஆன்மீக இலக்கிய தேன் அமுது ஆன்மீக நூல்கள் பல படித்துள்ளேன் அறுசுவை விருந்து சேக்கிழார் புராணம் நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இயற்கை அழகு வர்ணனைகள் தங்கள் படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் சேக்கிழார் புராணம் 06-Jan-2019 8:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
saisuganya

saisuganya

srilanka
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே