புதுவசந்தம்
பசியான நெஞ்சம்
பலமாக உண்ணும்
பழகிய உன் நினைவுகளையே ..
உள் ஓடும் காற்றும்
உன் பெயரை சொல்லும்
கனிவான புதுராகம்தான்...
உன்வார்த்தை பாடல்
அதற்காக தாளம்
இசைத்திடும் என் இதயம்தான் ...
மலராத மலரும்
நமக்காக மலரும்
எந்நாளும் புதுவசந்தம் தான்...