இனியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இனியா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 14 |
அம்மா !
வாடி நின்றேன் ,வாரி அணைத்தாய்!
தேம்பி வந்தேன்
தேறுதல் சொன்னாய்!
பசியோடிருந்தேன்
பதறி பால் சோறு தந்தாய்!
அடிபட்டு நின்றேன்-எனக்காய்
அழுது நின்றாய்!
நோய் என்று வந்தேன்
நோகாமல் பணிவிடை செய்தாய்!
இன்று
பார்க்கணும் போல் இருக்கு வா, என்றாய்
விமான பயணச் சீட்டிற்கே லாட்சம் வருது
பார்க்கலாம் என்றேன்!
அம்மா !
வாடி நின்றேன் ,வாரி அணைத்தாய்!
தேம்பி வந்தேன்
தேறுதல் சொன்னாய்!
பசியோடிருந்தேன்
பதறி பால் சோறு தந்தாய்!
அடிபட்டு நின்றேன்-எனக்காய்
அழுது நின்றாய்!
நோய் என்று வந்தேன்
நோகாமல் பணிவிடை செய்தாய்!
இன்று
பார்க்கணும் போல் இருக்கு வா, என்றாய்
விமான பயணச் சீட்டிற்கே லாட்சம் வருது
பார்க்கலாம் என்றேன்!
மாதம் மும்மாரி பெய்து
மழையெல்லாம் குளமாக்கி
கழனியெல்லாம் கதிர் விளைந்து
கதிரெல்லாம் போரடித்து
களம் களமாய் காயவைத்து
நிறைகுடமாய் மனம் நிறைந்து
மண்ணோடு மனிதன் கலந்து
மனிதனோடு மண் கலந்த நாளெல்லாம்
கனவோடு கனவாகி
நினைவோடு நில்லாமல் போனது !
சூழ்நிலையை சுரம் செய்து
வானிலையை வதம் செய்து
வையகத்தின் மழைக் கொன்று -உணவிற்கு
கையேந்தி நிற்கும் காலம்
கையருகில் உள்ளது !
தரிசெல்லாம் கழனியாக்கி
கடல் கடந்து வணிகம் செய்து
வையகத்தில் வாழ்ந்து நின்ற பாரதம்
இன்று தரிசெல்லாம் கூறு போட்டு
காசுக்கு மாலை போட்டு
விளைநிலத்தை விலைக்கு விற்று
வீணாய்ப் போய் நிற்கின்றது !
மரங்களும் ,மலைகளுமாய்
கருவறையின்
நிசப்த இருளிலிருந்து
வெளிவந்த அத்தருணம்
அந்த என் அழுகை...
அந்த ஒரே ஒரு அழுகை மட்டுமே
உன் முகத்தில் சிரிப்பையும்
உள்ளத்தில் உவகையும் தந்தது!!
அதற்குபிறகு
என்வயதொத்த குழந்தை
எங்கேயோ அழுதால் கூட
பேருந்தின் ஜன்னல் வழியே
பதறிப்போய் பார்த்தவள் நீ!!
புத்தகப்பையும் எழுதுகோலும் பிடித்ததால்
வலிக்குமே என்று
பள்ளிக்கூட வாசலிலேயே
என் விரல் பிடித்து முத்தமிடுவாய் !
என் வலியெல்லாம் உன் விரல் வழியே
வாங்கித்தான் போனாயோ ??
அரை நிஜாரிலிருந்து நான்
முழுச்சட்டை மாறியபின்
மேலும் கீழுமாய் நானே எனை
கண்ணாடியில் பார்ப்பதுபோல் ..
மோவாயில் விரல் வைத்து அதி
மண்சுமக்கும் மழலைக்கூட்டம் மடிநிரப்பும் கயவராட்டம்
...புண்சுமந்த நெஞ்சைக்கொண்டு புதுமைதேடி நாளுமோட்டம்
விண்வியக்கும் கல்விக்கூடம் விடிவதில்லை ஏழைவாழ்வும்
...கண்சிவக்கும் காட்சிக்கண்டு கயமையழிக்க எழுமோகூட்டம் ...
கந்தகத்தின் சூட்டில்நிதமும் வெம்பிமடியும் மழலையுள்ளம்
...குந்தகமாய் கொடியமனிதம் வஞ்சனையால் வந்தநரகம்
மந்தையான மனிதர்க்கூட்டம் மனதைமாற்றி எழுதவேண்டும்
...விந்தையான மனங்களெல்லாம் வீறுகொண்டு எழுதல்வேண்டும்...
வறுமைவிரட்ட வம்சம்விற்கும் கொடுமையெல்லாம் அழியவேண்டும்
...வெறுமைமட்டும் வாழ்வாய்வந்தால் விதியைக்கொன்று
பாப்பாவைத் தூங்கவைத்து விட்டு வந்து வேலையெல்லாம் முடித்து மணியைப் பார்த்தேன் மணி இரவு 12 ஆகி இருந்தது.இன்றைக்கு அன்னையர் தினமல்லவா? இந்தியாவில் மணி காலை 9.30 இருக்கும் என எண்ணிக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன் அம்மாவுடன் பேச,
அம்மாதான் எடுத்தாள் ,ஹலோ என்பதற்குள் காய்கறியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தா போதும்னு கத்தினாள்,
என்னம்மா ஆச்சு ?என்றேன் நான்,
அட பாப்பாவா ?
என்னடா இத்தனை மணிக்கு? மாப்ள பக்கத்துல இல்லையே ? நான் கத்திட்டேன்டி அப்பான்னு நினச்சு என்றாள் வெகுளியாக,
பரவாயில்லம்மா. அப்பா எங்க? என்று முடிப்பதற்குள்,
உங்க அப்பாதானே காலையில காபி கு
பாப்பாவைத் தூங்கவைத்து விட்டு வந்து வேலையெல்லாம் முடித்து மணியைப் பார்த்தேன் மணி இரவு 12 ஆகி இருந்தது.இன்றைக்கு அன்னையர் தினமல்லவா? இந்தியாவில் மணி காலை 9.30 இருக்கும் என எண்ணிக் கொண்டே தொலைபேசியை எடுத்தேன் அம்மாவுடன் பேச,
அம்மாதான் எடுத்தாள் ,ஹலோ என்பதற்குள் காய்கறியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தா போதும்னு கத்தினாள்,
என்னம்மா ஆச்சு ?என்றேன் நான்,
அட பாப்பாவா ?
என்னடா இத்தனை மணிக்கு? மாப்ள பக்கத்துல இல்லையே ? நான் கத்திட்டேன்டி அப்பான்னு நினச்சு என்றாள் வெகுளியாக,
பரவாயில்லம்மா. அப்பா எங்க? என்று முடிப்பதற்குள்,
உங்க அப்பாதானே காலையில காபி கு
என் ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் ,
இலை உதிர்ந்த மொட்டை மரங்களில்
ஏற்கனவே கட்டிய கூட்டை ஏக்கத்துடன்
சுற்றி வந்தன அந்த குருவிகள்,பனி மழை கொட்டியது,
குழந்தைக்கு குளிரும் என ஒரு
கம்பளியை இரண்டாக மாற்றினேன் மூடிய வீட்டினுள்,
ஜன்னல் திரையை விலக்கினேன்
கண்ட காட்சி கல் மனதை கரைத்தது
இறகுக் கம்பளிக்குள் மூடி கொண்டது
தன் பிள்ளைகளை அந்த தாய் குருவி
திறந்தவெளி கூட்டினில் நனைந்தபடிதான் !
படுக்கைக்கு சென்று கம்பளியை போர்த்தினேன்
கனத்தது மனம்,உதறிதள்ளினேன் கம்பளியை,
நித்திரை நிறைந்தது
தாய் குருவியின் நினைவுகளுடனே !
விழுதில்லா ஆலமரங்கள் !
ஒளியில்லா முழுநிலவுகள் !
அமைதியாய் ஆழ் மனதோடு
அழுது கொண்டிருக்கும் ஆண்டவர்கள் !
கருவறையில் சுமக்கையிலே
கனவும் கூட கண்டிறாள் -உன்
கல்யாண பந்தலிலே கூட
கற்பனையும் செய்திறாள் !
கட்டிகொண்டவள் மாற்றிவிட்டாள் என்ற
கடைநிலை கருத்துக்கு அர்த்தம் இல்லை
உன்னை பெற்றெடுத்தவர் உனக்கல்லவோ
பெரியவராய்த் தெரியவேண்டும் !
முத்தாய் மூன்று பிள்ளைகள்
சொத்தெல்லாம் அவர்கள் பார்வையில்
சொற்பமகி போக -
சிற்பமாய் செதுக்கினார்கள்
சிறுகல் அவர்களையும் !
பணம் சினமென்ற பேயிற்கு முன்னே
மனம் குணம் எல்லாம் ஒளிந்து கொள்ளும் காலமிது !
அப்பனிடம் ஒன்றுமில்லை
ஆண்டியவன் அருகில் நின்றால
மிதந்து கொண்டிருக்கும் மேகக் கூட்டங்களையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஹன்சினியிடம் என்னடா என்ன யோசிக்கிற என்று கேட்டதும் சற்றே என் பக்கம் பார்வையை திருப்பி ஒண்ணுமில்லம்மா நம்ம ஊர் எப்படி இருக்கும் ? எல்லாரும் எப்படி இருப்பாங்க ? என்னோட ஸ்கூட்டர் எல்லாம் நான் ரொம்ப மிஸ் செய்வேன்ல ? அங்க கார் இருக்குமா ? அவள் ஒரு கேள்விக்கு பதில் சொல்லுவதற்கு முன்பே அத்தனை கேள்விகளும் வந்து விழுந்தது ,இங்க எப்டி இருக்கோ அதே போலதண்டா அங்கேயும் ,சரி சீட் பெல்ட்ட போட சிம்பல் வருது பாரு என சொல்லிவிட்டு அவள் கையில் பசுல்ஸ் அண்ட் மேசஸ் புக்கை கொடுத்துவிட்டு நானும் மிதக்கும் வான்மெத்தையின் மேல் கண்ணை
நீல வானின் நித்திரைக் கலைத்தேன்
நிற்கா பூமியை நனைத்து அணைத்தேன்
சிரிக்கும் பூக்களைச் சிலிர்க்க வைத்தேன்
சிறகில்லா மனதின் சிந்தனைக் கலைத்தேன்
வெள்ளைப் பூக்களின் கொள்ளைச் சிரிப்பிலே
மயங்கி நின்றேன் , சில சமயம் விழுந்து வைத்தேன்
பச்சை புல்வெளி பூரித்து நிற்க
இச்சை வார்த்தைகளால் இதமாய் நனைத்தேன்
நிலவுப்பெண் நீங்கி சென்றாள் என
நிதர்சனம் கூறி நிற்காமல் வந்தேன்
உதிக்கும் சூரியனின் உள்ளத்தை கவர்ந்து
அணைக்கும் மேகக் கைகளால் ஒளித்து நின்றேன்
வானே கருணை செய் என
வாடி நின்ற உழவனுக்கு
வந்தேன் நானே என
வருத்தம் தீர
காலை அலுவலகம் செல்லும் பரபரப்பு ,தினமும் நான் தாண்டிச் செல்லும் பேருந்து நிலையத்தைத் தாண்டி செல்லுகையில் என் கண்கள் 1 நிமிடம் திரும்பி பார்த்தது,கை ,கால்கள்உடைந்து கட்டு போடப்பட்ட நிலையில் மெலிந்த ஒரு பெண்மணி முக்காடிட்டு ,உடலை குறுக்கி படுத்திருந்தார்.மணியைப் பார்த்தேன் எட்டாகியிருந்தது அந்த பெண்ணும் கண்களை மூடியிருந்தார் ,தாமதமாக போய் இடிபட்டு பேருந்தில் நிற்கும் அவஸ்தை மனதின் முன் நிழலாட கால்கள் வேகமாக நடை போட்டன என் பேருந்து நிறுத்தத்திற்கு.அலுவலகத்தில் வேலை ஓடவில்லை,
நேரத்தை கடிந்து கொண்டேன் ஐந்து ஆகவில்லை என ,அவசரமாக பேருந்தைப் பிடித்து இறங்கி வந்தேன் அவள் படுத்திருந்த நிறுத்தத்திற்