பவித்ரன்1 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பவித்ரன்1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-May-2015 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 9 |
விழி ஆகாரம்..
காதல் பசியில்
செரிக்கும் கவிதைகள்
----------------------------------------
கடந்துப்போன நிழற்களையெல்லாம்
தின்று செழித்துக்கொண்டிருக்கும்
எனது கவிதைகளை
எண்ண நதிகளில்
நினைவுப்பரிசல்களில் நீந்தவிடுகிறேன்.
இவைகள் செல்லட்டும்...
எங்கேனும் செல்லட்டும்
எந்த ஒரு முதிர்கன்னியின் விழிகளில்
கிறக்கத்துடனோ
இரக்கத்துடனோ
வாசிக்கப்படுமாயின்
எந்தன் எழுத்துக்கள்
அக்கன்னியின் கழுத்தில்
தாலியை கட்டிக்கொள்ளட்டும். அந்த
அங்கீகாரத்தில் என் கவிதை
திருமணப்பரிசும் பெற்று தொலையட்டும்.
இனியெந்த கவிதையிலும்
எந்தன் பெயர் வேண்டாம்.
இனியெந்த கவிதையிலும்
அவளும் கருவாக வேண்டாம்.
நாடகக்கலை
நலிந்து விட்டதாம்
நலியாமல் என்ன செய்யும்
எல்லோரும் அரசியலுக்கு வந்து விட்டால்.......
மானே, தேனே
மாதே
எனும் கவிதைகள்
பேனே, ஈரே
எனப் பெருகுவது சரியோ
ஆணில் பெண்ணும்
பெண்ணில் ஆணும்
சரி பாதியாய்
இருப்பதை அறிவீரோ !!!!
ஒரு முறை கூட
ஒரு மலரை
உன்னிடம் தந்து
என் காதலை சொன்னதில்லை
வாடுகின்ற மலரை கண்டு
நீ வாடுவாய் என்பதால்
காடு......
மண்ணின் ஆடை
மலையின் கூந்தல்
நதியின் பிறப்பிடம்
மக்களிடமிருந்து தப்பித்த
மாக்களின் மறைவிடம்
நிலமகளின் பச்சைப் பட்டாடை
அருவிக் குழந்தைகள் தவழ்ந்து
நடை பயிலும் மைதானம்
மர மாமுனிகள் ஒற்றை காலில் தவம் இருக்கும்
தவச்சாலை !!!
பொன் வானம் சிவந்தது
கதிரவன் கரங்கள் தீண்டியே!!!!!
உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...
உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...
பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...
மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...
உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...
இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...
நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...
உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...
நீ
கண்காட்சிக்கு செல்லும்ப