இருமதி பந்தலராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இருமதி பந்தலராஜா
இடம்:  இருமதி(தேவகோட்டை) (இ) திருச
பிறந்த தேதி :  21-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jan-2012
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  57

என்னைப் பற்றி...

பெயர் :பந்தலராஜா சொந்த ஊர்:இருமதி(தேவகோட்டை) வளர்ந்தது:திருச்சி

என் படைப்புகள்
இருமதி பந்தலராஜா செய்திகள்

அவள் சதை விற்பனைக்கு பகுதி -1

"யக்கா மச்சானை வெட்டி சாய்ச்சுபுட்டாங்க அக்கானு" வேதவள்ளி தம்பி ஓடி வந்து சொன்ன சேதி கேட்டு சுவற்றில் சாய்ந்தவள் பேச்சு மூச்சின்றி சிலையாய் நின்றாள்.

வேதவள்ளி ராமையா தேவரின் மனைவி.ராமையா தேவர் ஒரு நிலத்தகராறில் ஆத்திரப்பட்டு வேலுச்சாமி அம்பலம் மகனை வெட்டி கொன்று விட ஏழு வருடம் சிறை தண்டனை முடிந்து இன்னைக்குதான் வெளியில் வந்தார்.என்னைக்கு ராமையா தேவர் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டதோ அன்னைக்கே அவரோட மரண தேதியும் குறிக்கப்பட்டதுன்னுதான் சொல்லனும்.பழிக்கு பழி, பரம்பரை பகை இதெல்லாம் அந்த சமூகத்துக்கு புதுசில்ல.

எல்லா காரியமும் முடித்து ரொம்ப சோர்வாகவே இருந்தாள் வேதவள்ளி.அழுது கொண்டேயிருந்தவளை நோக்கி "ஏத்தா ஏன் இப்படி உட்காந்து அழுதுகிட்டு இருக்க?சின்ன மருது பெரிய மருது கணக்கா ரெண்டு சிங்கத்தை பெத்து வச்சிருக்க.அவனை பழிக்கு பழி வாங்கிடலாம் விடுனு" மீசையை முறுக்கிய படி ஆவேசமா பேசினார் பெரியவர்.

"பழிக்கு பழி வாங்குறேன்னு என் புள்ளைகளை பலி கொடுத்துறாதீங்க அப்பு.அவனுங்க பகை மறந்து படிச்சு பெரியாளா ஆகனும்.அரிவாளை தூக்கி அல்பாயுசுல போனது அவங்க அப்பனோட போகட்டும்னு" தன் பிள்ளைகளை பகை ஊட்டாம படிப்பை ஊட்டி வளர்க்குறா சார் அந்த தாய் ராஜா கதை சொல்ல பாதியிலேயே மறித்தார் தயாரிப்பாளர்.

"என்னப்பா நீ பகை மறந்து படிச்சானா பார்க்குறவனுக்கு எப்படி இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.பழிக்கு பழினு ஆக்சன் சீன் வச்சா தானே நமக்கு கல்லா கட்டும்னு"தயாரிப்பாளர் சொல்ல 

"சார் பழிக்கு பழி மட்டுமே அந்த சமூகத்தோட பழக்கம் இல்ல சார் அங்கயும் உறவுகளுக்குள்ளான கட்டமைப்பு பத்தி அருமையான விசயம் இருக்கு.இதுவரை அவங்களை காட்டுமிராண்டியா காட்டி சினிமா எடுத்தாச்சு. இனியாவது படிச்சு முன்னேறி அதிகாரத்துல வந்து தப்பை தட்டி கேட்குற மாதிரி படம் எடுக்கலாமே"

"சரிதான் தம்பி நீங்க சொல்லுற மாதிரி சீர்திருத்தம் பண்ணுனா சினிமால சில்லறை பார்க்க முடியாதே.இதெல்லாம் நீங்க படம் தயாரிக்கும் போது பண்ணிக்குங்க"

"சார் அது வந்து"

"தம்பி இந்த கதையெல்லாம் வேணாம் உங்களுக்கு பத்து நாள் டைம் தாரேன் நல்லா திரில்லர் க்ரைம் கதை ரெடி பண்ணி கொண்டு வாங்க. அதுல கொஞ்சம் மெசேஜ் உங்க திருப்திக்கு சொல்லிக்குங்க.உங்களால முடியும்னா சொல்லுங்க.ஆனா உங்களுக்கான டைம் பத்து நாள்தான்"

"ஓகே சார்".

பத்து நாள்ல ஒரு த்ரில்லர் க்ரைம் அதுல மெசேஜ்.முதல்ல என்னை நான் ப்ரூப் பண்ணனும் அதுக்கு வந்த வாய்ப்பை விட்டுற கூடாதுனு தயாரிப்பாளரிடம் விடைபெற்று கிளம்பினான் ராஜா.

.............................தொடரும்...............

மேலும்

இருமதி பந்தலராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2018 7:34 pm

உண்ணாவிரதம் வெகுசிறப்பாக முடிந்தது
என்ன ஒரு குறை
உணவு இடைவேளையில்
ஊறுகாய் இல்லையென்று
வருத்தங்கொண்டார் அக்கட்சித் தொண்டர்...!

மேலும்

ரொம்ப யதார்த்தம் 16-Apr-2018 7:45 pm

வாழ்க்கை


நடுக்கடலில் தத்தளித்தேன்
காப்பாற்ற கைகள் தேடினேன்
மூழ்கும் நேரம்
ஒருமுறை முயன்று பார்ப்போமென்று
முயற்சி செய்தேன்
நீந்த கற்றுக் கொண்டேன்
நீந்திக் கொண்டிருக்கிறேன்
கரைகளை கண்டுவிட்டேன்
விரைவில் கரையை அடைந்து விடுவேன்
கடலில் தள்ளிய கைகளுக்கும்
காப்பாற்ற தவறிய கைகளுக்கும் நன்றி
வாழ்க்கையை எனக்கு வாழ கற்று தந்தமைக்கு...!

இருமதி பந்தலராஜா

மேலும்

இருமதி பந்தலராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 5:09 pm

புன்னகை பூவே
உன்னை
போலீசில் சிக்கவைக்கப் போகிறேன்
கண்ணில்
கஞ்சா வைத்திருக்கும்
குற்றத்திற்க்காக...!

மேலும்

காதல் பாவங்க அழகான வரிகள் 04-Sep-2015 9:24 am
அச்சச்சோ ..... 03-Sep-2015 6:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (25)

Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (26)

அருண்

அருண்

இலங்கை
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
மேலே