riyaz - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  riyaz
இடம்:  ஜெயங்கொண்டம்
பிறந்த தேதி :  28-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Sep-2012
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  35

என்னைப் பற்றி...

சகஜமாக பழகுபவன்,
நட்பை விரும்புபவன்,
என்னை ஏமாற்றினால் எனக்கு பிடிக்காது

என் படைப்புகள்
riyaz செய்திகள்
riyaz - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2014 7:21 am

திருமணங்களுக்கு ஆடம்பர செலவு தேவைதானா? எனக்கு தெரிந்த பெண் வீடற் ஆடம்பர க்செளவு செய்து விட்டு இப்பொது க்சிரமபடுகின்றனர்

மேலும்

நல்ல பதிவு,நன்றி தோழரே 15-Apr-2014 10:12 am
நன் மேற்குறிய கருத்தால் கோபித்து கொள்ளாதீர் சகோ! உண்மையில் திருமணம் இரு மனம் இணைவதற்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை எடுத்துரைபதர்காகவும் தான். திருமணதிற்கு வரும் அனைவருக்கும் உணவு அளிப்பது என்பது ஒரு தானம் ஆகும். ஒரு மனிதன் அவன் வாழ்வில் தான தருமங்கள் செய்ய வேண்டும், அப்படி செய்ய இயலாதவர்கள் அவர்களது திருமணதிற்கு வரும் மக்களுக்கு உணவு அளிப்பதால் அவன் அன்னதானம் செய்த புண்ணியம் பெறுகிறான், வயிறு நிறைத்து மக்கள் வாழ்த்தும் பொழுது அது புண்ணியமாக மாறி, மணமக்களை நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழவைக்கும். மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி: "போரில் மாண்ட கர்ணன் அவன் செய்த புண்ணியங்களால் சொர்க்கம் சென்றான். ஆனால் சொர்க்கம் சென்ற அவனுக்கு பயங்கர பசி ஏற்பட்டது. அவன் எதிரில் நிறைய உணவு பண்டங்கள் இருந்து அவனால் ஒரு பருக்கையை கூட உண்ண முடியவில்லை. மிகுந்த மனக்கவலை அடைந்த கர்ணன், பகவான் கண்ணனிடம் முறையிட்டான். பகவான் கண்ணன் "கர்ணா, நீ அணைத்து தான தருமங்களை செய்தாய் ஆனால் நீ அன்னதானத்தை செய்யவில்லை. அதனால் தான் உனக்கு பசிக்கிறது, கண் எதிரில் உணவு இருந்தும் சாப்பிட முடியவில்லை. ஒரு முறை இரு அந்தணர்கள் உன்னிடம் அன்னசத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர், நீ அதோ அங்கே இருக்கிறது என்று உன் ஆள் காட்டி விரலால் சுட்டி காட்டினாய். அவர்களுக்கு அன்னச்சதிரத்தை சுட்டி காட்டிய உன் ஆள் கட்டி விரலை உன் வாயில் வைத்துக்கொள் என்றார். விரலை வாயில் வைத்ததும் கர்ணனுக்கு பசி தீர்ந்தது". இந்த நிகழ்ச்சியின் மூலம் தானத்தில் சிறந்தது அன்ன தனம் என்று பெரியோர்களால் கூற படுகிறது. (ஒரு வார இதழில் படித்தேன்) 15-Apr-2014 8:45 am
நகைச்சுவை நன்றாக உள்ளது 15-Apr-2014 8:27 am
என்ன சகோ இப்படி ஒரு கேள்வி? நமது சந்தோசத்தை இழக்கும் தருணத்தை நாம் கொண்டாட வேண்டாமா? "நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரம் தாலி கட்டுங்கோ" என்று ஐய்யர் சொல்லுவது காலம், நேரத்தை அல்ல நமது நல்ல நேரத்தை தான். 15-Apr-2014 8:22 am
riyaz - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2014 10:26 pm

"ஐய! ச்சி, ஒரே உப்பு, பாட்டி கண்ணு எரியுது பாட்டி,அய்யய்யோ முடியல" பேத்தி பிரியாவின் கத்தலை கேட்டு கரைக்கு வந்த பாட்டி கோப்பையில் கொண்டுவந்த குடிநீரை கொண்டு பிரியாவின் கண்களை கழுவினார்.

கோடை விடுமுறையை கழிக்க பாட்டி வீட்டிற்கு வந்த பிரியாவை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்திருந்தார் அவள் பாட்டி.

கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த பிரியாவின் கண்களில் கடல் நீர் பட்டதால் கண்களை கழுவி விட்டு கடற்கரை மணலில் வீடு கட்ட ஆரம்பித்தால் பிரியா.

"பாட்டி, எனக்கொரு சந்தேகம்??" என்றாள்.

" சொல்லுமா "

" கடல் நீர் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது பாட்டி??" என்றாள்.

"ஓ அதுவா? சொல்லட்டுமா"

மேலும்

நல்ல கருத்தான கதை அருமைத்தோழரே......! 16-Apr-2014 3:52 pm
riyaz - dine அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2014 5:30 pm

எழுத்தில் இணைய விளையாட்டுக்களை சேர்ப்பது எப்படி?

மேலும்

சேர்ப்பார்கள்! ஆனால் அதற்குத் தனிக் கட்டணம் உண்டு. சரியா?... உள்ள விளையாட்டைப் பார்த்தாலே நல்லா பொழுது போகுமே, தம்பி! ... 09-Apr-2014 9:17 am
ஏன் சகோ? விளையாட நாம் குழந்தைகள் அல்ல! நீவீர் விளையாட வேண்டும் என்றால் கவிதைகளில் விளையாடுங்கள், கதை எழுதுங்கள், நமது இணைய தளத்தில் இருக்கும் அனைத்தையும் படியுங்கள்!!! 08-Apr-2014 10:08 am
இப்போது இருக்கிற விளையாட்டே தாங்க முடியல்லே..! நீங்க வேற.. தனியாவா..!!!! 07-Apr-2014 5:52 pm
riyaz - Jeyesnath அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Apr-2014 11:43 am

தமிழ் படிபதால் என்ன நன்மைகள் என்ன தீமைகள் ?

மேலும்

நீவீர் எதற்காக சுவாசிக்கின்றீர் 08-Apr-2014 10:01 am
இப்படி பிழையில்லாமல் கேள்வி கேட்க முடியும்.(**படிபதால் ) மேலும் ஐயா ராஜமாணிக்கத்தின் கருத்தேன் என் கருத்து 03-Apr-2014 8:32 pm
கேள்வி, தமிழ் ஏன் படிக்க வேண்டுமா? தமிழில் ஏன் படிக்க வேண்டுமா? தமிழ் மட்டுமே படிக்க வேண்டுமா? மூன்றுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது! தமிழில் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் இஸ்மாயில் ஐயா கொடுத்துவிட்டார்! தமிழ் ஏன் படிக்க வேண்டும்? 1) அது நம் கடமை! அது நமது தாய் மொழியல்லவா? 2) நம் முன்னோர்களின் அறிவு, நாகரீகம், பண்பாடு, அரசியல், போர்,சமயம், மருத்துவம், வான நூல், கணிதம்,கலை, வரலாறு, வாழ்க்கை முறை, சமூகப் பழக்கவழக்கம், விழாக்கள், அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். 3) அதனால் ஒரு பெருமிதம் உண்டாகும். இவ்வளவு சிறந்த முன்னோர் வயிற்றில் பிறந்தவர்களா இன்றைக்கு இப்படியிருக்கிறார்கள் என்ற கழிவிரக்கம் தோன்றும்; அது, பழமையைக் காட்டிலும் எம் தமிழினம் உலகில் உயர வேண்டும், வளர வேண்டும் என்ற வேகத்தையும் விவேகத்தையும் கொடுக்கும். 4) நாம் வீட்டில், தெருவில், வியாபாரத்தில், பள்ளியில், மருத்துவ மனைகளில் எல்லாம் பெரும்பாலும் தமிழிலேயே பேசுகிறோம். ஆகவே நம் அன்றாடக் காரியங்களைத் தவறு நேராமல் நிறைவேற்றிக் கொள்ளத் தமிழ் அவசியம். 5) நம் மொழியில் உள்ளதுபோல் நீதி நூல்களும், இலக்கியங்களும், ஆன்மிக நூல்களும் பிற உலக மொழிகளில் இல்லை! அவை நம் செயல்களைச் செம்மைப் படுத்தும்; வாழ்க்கையை நெறிப்படுத்தும்; மனதைப் பக்குவப் படுத்தும். 6) உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத மூலிகை (சித்த) வைத்தியம், மூச்சுக் கலை, இரசவாதம், முத்திரைகள், யோகப் பயிற்சிகள் எல்லாம் தமிழில்தான் காணக் கிடக்கின்றன. 7) தீமை என்று எதுவும் இல்லை. இல்லை, இல்லை! தமிழில் செக்ஸ் புத்தகம் படித்தால் தீமை. 8) படிப்பதை எல்லாம் படித்துவிட்டுத், தம்பி, 'நான் இந்தக் கேள்வியைக் கேட்க வில்லை; நீங்கள் என் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; நான் தமிழ் மட்டும் படித்தால் போதுமா என்றுதான் கேட்டேன்; என் மனதிலுள்ள பதிலை உங்களுக்குச் சொல்லத் தெரியவில்லை! ஏதேதோ உளறுகிறீர்கள்' என்று சொல்லிவிடாதே, சரியா?... 03-Apr-2014 5:04 pm
நல்ல கேள்வி சமீபத்தில் நான் படித்தது ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா? சேகர் சுவாமி “இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் - அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். “ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்” என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. “இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம்” என்று இன்னொரு நாளேடு எழுதியது. இயற்கையான எதிர்வினை ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தவர்களிடமிருந்து முலாயமுக்கு வந்த கண்டனங்களை இயற்கையான எதிர்வினையாகப் பார்க்க முடிகிறது. ‘தூதுவன் கொண்டு வந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றதைப் போல’ ஆகிவிட்டது அவர்களுடைய செயல். உலகத்தின் வளர்ந்த நாடுகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால், முலாயம் சிங் சொன்னதுதான் சரி என்ற உண்மை உறைக்கும். சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற சில நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றிருப்பது புலனாகும். ஆங்கிலத்தை அவர்கள் சர்வதேச உறவுக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது வெறும் பிதற்றல். உலக நாடுகளின் அனுபவங்களோடு பார்க்கும்போது, ஆங்கில ஆதரவாளர்களின் வாதம் தோற்றுவிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரிந்தவர்கள் - அப்படிப் பேச முடியாதவர்களைவிட - தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் திரிகின்றனர். இதுவும் ஒரு வகை வெறிதான். ஆங்கிலம் தெரிந்தவர்களால் இன்றளவும் ஊக்குவிக்கப்படுகிறது இந்த மொழிவெறி. இது இந்திய சமுதாயத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டது. தாய்மொழியில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடிந்த பெரும்பான்மையானவர்கள் இந்தச் சிறுபான்மை ‘ஆங்கில அறிவாளி’களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு இதனால் அளவில்லாத கோபமும் ஏற்படுகிறது. சொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்! இந்த மொழிவெறியால் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக ஏற்படுகிற பாதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும்கூட இந்த மொழிவெறிதான். இனவெறி என்பது வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. பெரும்பான்மைச் சமூகமான வெள்ளையர்கள், சிறுபான்மை கருப்பினத்தவர்களை வெறுத்தார்கள். இதன் எதிர்வடிவம்தான் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினர், அந்த மொழி தெரியாத பிற இந்தியர்களைத் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுவும். எந்த மொழி விருப்பமானது? நாட்டின் முதல் எட்டு பெருநகரங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் விகிதம் பார்த்தால் சராசரியாக 2:1 என்று இருக்கிறது. அதே டெல்லியில் 1:1, புணே 7.5:1, அகமதாபாதில் 11:1 என்றிருக்கிறது. பெருநகரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மாநில மொழிகளே அதிகம் விரும்பப்படுகின்றன, 12:1. சென்னையில் அது 7:1. அகமதாபாதில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கின்றனர். ஆங்கிலம் சிறுபான்மையே அதற்காக, முலாயம் கோரியபடி ஆங்கிலத்துக்குத் தடை விதிப்பது சரியாகிவிடாது. நாடாளுமன்றம் போன்ற பொது அரங்குகளில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தவிர்க்கப்படும் ‘மொழிஒதுக்கல்’ தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆங்கில ஆதிக்கம் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே. தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை. அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம். தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம். ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர். தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம். இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது. ஆங்கிலம் விளைவித்த கேடு இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம். இந்தியா செய்திருக்க வேண்டியது ஜப்பான், ஜெர்மனி, கொரியா போல கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ‘சரளமாக ஆங்கிலம் பேச வராதா?’ என்று வாயில் பிளாஸ்திரி போட்டு விளம்பரம் செய்து கேலி செய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் கூனிக் குறுகி, இரண்டாம்தரக் குடிமக்கள் போல, அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் எதிரில் கைகட்டிச் சேவகம் செய்கின்றனர். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதி பேசும் அரசியல் தலைவர்கள், முதலில் ‘ஆங்கில மாயை’யை உடைக்க முன்வர வேண்டும். தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் கற்றுத்தரப்பட்டால், ஏராளமான மாணவர்கள் எளிதாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். மொழிவழியில் முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் களம்காண எந்த அரசியல் கட்சியாவது தயாராக இருக்கிறதா? © பிஸினஸ்லைன், தமிழில்: சாரி. link : "tamilthehinducom/opinion/columns/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/article5850721.ece" 03-Apr-2014 1:56 pm
riyaz - Shyamala அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2014 10:16 pm

சற்று சீக்கிரம் தான் சாப்பிடேன்

நிஜத்தில் நீ அதை உருக வைத்து சாப்பிடுகிறாயா? என்னை உருக வைக்க தான் சாப்பிடுகிறாயா?

மேலும்

நிஜமான இன்பம்தான் 08-Apr-2014 9:15 pm
கருத்துக்கு நன்றி 08-Apr-2014 9:14 pm
குழந்தைகள் சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தானே!!! எந்த கஷ்டங்கள் வந்தாலும் குழந்தையின் சிரிப்பை பார்கையில் எல்லாம் பறந்து போகும். 08-Apr-2014 8:19 am
உருகுவதைப் பார்ப்பதே இன்பமல்லவா 07-Apr-2014 6:47 am
riyaz - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Apr-2014 8:22 pm

தற்போது நமது தேசத்தில் குற்றங்கள் அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது. கொலை, கொள்ளை, ஊழல், இலஞ்சம், ஏமாற்றுதல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், பழிவாங்குதல், கௌரவகொலை, கள்ள காதல், மற்றும் தற்கொலைகள் இவற்றிக்கான காரணங்கள் என்ன?

மேலும்

ஆசை படுவது மனித இயல்பு சகோ, தண்டனைகள் குறைவதால் தவறுகள் அதிகமாகிறது என்பது என் கருத்து, குற்றங்களை தடுப்பதற்கும் செய்த குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதற்கு தானே நீதி மன்றங்கள் அமைக்க பட்டன? பின் ஏன் உயர் நீதி மன்றத்தில் கொடுக்க பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர பட்டு தீர்ப்பு மாற்றி அமைக்க படிக்கிறது சகோ? தீர்ப்பு வழங்க பட்டதை ஏன் மாற்றி அமைக்க வேண்டும்? பின் நீதிமன்றங்கள் எதற்கு? 07-Apr-2014 8:26 pm
பேராசையே காரணம் ! ஆசைப்படுவது தப்பு இல்லை. ஆனால் அதே ஆசை வெறியாக மாறினால், சுயநலமான சிந்தனைகள் அதிகரித்தால், நீங்கள் கூறியது தான் நடக்கும். 07-Apr-2014 12:22 pm
riyaz - riyaz அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2014 12:10 am

திரைஅரங்கில் கூட்டம் அவ்வளவாக இல்லை, பணி சுமையில் தப்பித்து கொஞ்சம் மனசாந்திக்கு திரைப்படம் பார்க்க வந்திருந்தேன் தனியாக. எண்ணி 20 முதல் 25 பேர் மட்டுமே பரவலாக அமர்ந்திருந்தோம். யாரும் முன் இருக்கையில் இல்லாததால் காலை நன்றாக நீட்டி உட்கார்ந்திருந்தேன். திடீரென பின் மண்டையில் ஒரு கை பட
" யாருடா அது??" என்று திரும்பி பார்த்தேன்,
ஒரு தம்பதியினர் வந்து என் இருக்கையின் பின் அமர்ந்தனர்.
" சாரி பாஸ்" என்றார் அவர்.
நானோ முறைத்து விட்டு திரும்பிவிட்டேன்.

சிறிது நேரத்தில் திரைப்படம் தொடங்க கதாநாயகன் நடந்து வருவது போன்ற ஒரு கட்சி வந்தது.
" ஹே!!! ஹீரோ வந்துட்டார், கருப்பு சட்டை போட்டுகிட்டு

மேலும்

ஒருமனம் இரு கண்கள் ... கதை மிகவும் அருமை.. 06-Apr-2014 7:56 pm
ஆத்திரம் வரும்போது புத்தி மழுங்கும் என்பதும்,ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளங்கினால் வாழ்கை இனிமையாக இருக்கும் என்பதும் உணர்த்திய கதை அருமை தோழரே! 06-Apr-2014 9:38 am
நன்றி சகோ! என் தோழிக்கு சமர்ப்பணம் 06-Apr-2014 8:50 am
நன்றி தோழியே! என் தோழிக்கு சமர்ப்பணம் 06-Apr-2014 8:50 am
riyaz - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 12:10 am

திரைஅரங்கில் கூட்டம் அவ்வளவாக இல்லை, பணி சுமையில் தப்பித்து கொஞ்சம் மனசாந்திக்கு திரைப்படம் பார்க்க வந்திருந்தேன் தனியாக. எண்ணி 20 முதல் 25 பேர் மட்டுமே பரவலாக அமர்ந்திருந்தோம். யாரும் முன் இருக்கையில் இல்லாததால் காலை நன்றாக நீட்டி உட்கார்ந்திருந்தேன். திடீரென பின் மண்டையில் ஒரு கை பட
" யாருடா அது??" என்று திரும்பி பார்த்தேன்,
ஒரு தம்பதியினர் வந்து என் இருக்கையின் பின் அமர்ந்தனர்.
" சாரி பாஸ்" என்றார் அவர்.
நானோ முறைத்து விட்டு திரும்பிவிட்டேன்.

சிறிது நேரத்தில் திரைப்படம் தொடங்க கதாநாயகன் நடந்து வருவது போன்ற ஒரு கட்சி வந்தது.
" ஹே!!! ஹீரோ வந்துட்டார், கருப்பு சட்டை போட்டுகிட்டு

மேலும்

ஒருமனம் இரு கண்கள் ... கதை மிகவும் அருமை.. 06-Apr-2014 7:56 pm
ஆத்திரம் வரும்போது புத்தி மழுங்கும் என்பதும்,ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை விளங்கினால் வாழ்கை இனிமையாக இருக்கும் என்பதும் உணர்த்திய கதை அருமை தோழரே! 06-Apr-2014 9:38 am
நன்றி சகோ! என் தோழிக்கு சமர்ப்பணம் 06-Apr-2014 8:50 am
நன்றி தோழியே! என் தோழிக்கு சமர்ப்பணம் 06-Apr-2014 8:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
user photo

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
Shyamala

Shyamala

Pudukkottai

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
Shyamala

Shyamala

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
nandagopal d

nandagopal d

salem
மேலே