முத்துக்குமரன் P- கருத்துகள்

தங்களின் விலைமதிக்க முடியாத கருத்துக்களால் நாளுக்கு நாள் நான் வளர்க்கிறேன் நன்றி உங்களால் நான் வளர்க்கிறேன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தங்களின் வார்த்தைகள் என்னை மேலும் ஏழுத தூண்டுகிறது மிக்க நன்றி நண்பரே.

தங்களை போன்று நல்ல மனம் உள்ளவர்களின் ஊக்கத்தால் நான் வளர்க்கிறேன் மிக்க நன்றி.

தங்களின் கருத்துக்கு எனது பணிவான வணக்கங்கள். இனி வரும் பதிவுகளில் தாங்கள் சொல்வது போல் மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

தங்களின் கருத்துக்கு எனது நன்றிகள்.

எப்போதும் கடவுளை வணங்குங்கள்
கஷ்டத்தில் மட்டும் தேவைக்கு
கடவுளிடம் செல்லாதீர்கள், உங்களது
இப்போதைய  வாழ்க்கையில் உள்ள
சந்தோஷத்துக்கு கடவுளுக்கு நன்றி
சொல்லுங்கள்.  உங்களுக்கு என்ன
தேவை எப்போது தேவை எப்பொழுது
கொடுக்க வேண்டும் என்பது எல்லாம்
அவருக்குத் தெரியும்

மலர்கள்
ஒரு மனித மரணத்தை
அலங்கரிக்க மரணிக்க

படும் அழகு மலர்கள்

வேதனைக்குரியது.

மனம்
கடந்த காலத்தில் நடந்த
சம்பவங்களை நினைத்து
நிகழ்காலத்தை இழக்காமல்
நம்முடைய எதிர்காலமும்
முடங்கிவிடாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்

தவறு செய்பவர்களுக்கு தண்டனை உண்டு
தமிழகத்தின் தலைநகரின் இதயமாக கருதப்படும் நகரில் இதய நாயகனாக வலம் வந்தவர் ராஜா என்ற இளைஞர். அவர் குடும்பத்தில் அப்பா அம்மா அவர் மட்டும். ஒரே பிள்ளை என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டார். நினைத்ததை சாதிப்பவன் அவருக்கு அவர் அம்மா அதிக செல்லம் கொடுத்து வந்தார். அதனால் ராஜா பல தவறுகள் செய்து வந்தான். பொறுப்பின்றி ஊரை சுற்றி வந்தான். அவன் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு குறைந்த சம்பளம்தான். மிகவும் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்திவந்தார். ராஜாவை அவன் விருப்பப்படி படிக்க வைத்தார். ராஜா நன்றாக படைத்தார் ஆனால் பெண்கள் விஷயத்தில் சபல புத்தி உடையவன். ஆனால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் உடையவன். பல மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவன். ஒரு வழியாக அவனது படிப்புகளும் முடிந்தன.
மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டான் ஆனால் அவன் அப்பாவுக்கு அவர் வாங்கும் சம்பளத்தில் மேல் படிப்பு என்பது முடியாத காரியம். அவனுக்கு உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பது மிகுந்த ஆசை. இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு மாலை கல்லூரியில் மேற்படிப்பு படிக்க முடிவு செய்தான். அவன் நினைத்தது போலவே மாலை நேர கல்லூரிக்கு அருகில் ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் பகுதி நேர வேலையும் கெடுத்தது. பகுதி நேர வேலையில் வரும் சம்பளத்தில் மாலை நேர கல்லூரி படிப்பையும் தொடர்ந்தான். ராஜா புதிதாக சேர்ந்த அலுவலகத்தில் மொத்தம் ௬ நபர்கள் இருந்தனர். அந்த ௬ நபர்களில் பெண் பணியாளார்களும் உண்டு. ராஜாவுக்கு வேலை தொடக்கத்தில் மந்தமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல சூடுபிடித்து.
ராஜாவுக்கு திறமை அதிகம் இருந்ததால் நிர்வாக தலைமை அவனுக்கு பல பொறுப்புகளை கொடுத்தது. நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வான் அதனால் நிர்வாகம் அவரை முழுமையாக நம்பியது. அவன் தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆரம்பத்தில் மெல்ல உரசிப் பார்த்து. இணங்குபவர்களாய் தன்வசப்படுத்தி மன்மத லீலைகளை தொடருவேன். அவரது உறவுக்கு ஒத்து வராத பெண்களை தனக்கு இருந்த செல்வாக்கால் வேலையிலிருந்து தூக்கி விடுவேன். நிர்வாக தலைமையிடம் நெருக்கமாக இருந்தால் அனைத்தையும் அரங்கேற்றினார். நாள் அடைவில் இவன் மீது நிர்வாகத்திற்கு அதிக நம்பிக்கை வந்ததால் அனைத்து பொறுப்புகளையும் கொடுத்தனர்.
ஒரு கட்டத்தில் நிறுவனத்திற்கு தேவையான பணி ஆட்களை எடுப்பது தேவை இல்லை என்றால் தூக்குவது என்று அணைத்து பொறுப்புகளும் ராஜாவுக்கு கொடுக்கப்பட்டது. அவரது லீலை நாளடைவில் அதிகமானது தன் ஆசைக்கு இணங்காத பெண்களை வேலையை விட்டுத் தூக்குவது தனக்கு ஒத்துவரும் பெண்களை வேலைக்கு எடுப்பது இப்படியாக அவரது அட்டகாசம் அதிகமானது. போதை குறைக்கு நிர்வாகத்தின் முதலாளிக்கு பெண் உதவியாளர் தேவை பட்டது அதை தேர்ந்தெடுக்கும் பணியும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பொறுப்பு வந்தவுடன் ராஜா வேறுவிதமாக யோசித்தான் அழகான பெண்ணை தேர்வு செய்து முதலாளியும் காம வலையில் விழ திட்டமிட்டான். அதையும் நினைத்த மாதிரி செய்து முடித்தான் நினைத்தபடி அரங்கேறியது.
அப்படியே அவனது காம லீலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. அலுவலகத்தில் பணிக்கு வரும் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடினான். தன் நினைத்த அனைத்தும் அரங்கேறும் அளவுக்கு அலுவலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அவனது ராஜாங்கமே முழுமையாக நடைபெற்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில பெண்கள் கடுமையாக போராடி வேலை பார்த்தனர். ஒரு கட்டத்தில் தனக்கு காமத்தில் சரி செய்பவர்களுக்கு முதலாளியிடம் சொல்லி பணி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி செயல்பட்டான். இவற்றிற்கு ஆசைப்பட்டு சில பெண்கள் அவனோடு உடலை பகிர்ந்து கொண்டனர். ராஜா வீட்டுக்கு செல்வதை குறைத்துக்கொண்டு முழு மூச்சாக அலுவலகத்துக்கு பாடுபட்டான். எந்த வேலையாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் செய்து முடித்தான். தன்னால் முதலாளியிடம் மேலும் அதிக நம்பிக்கை கிடைத்தது.
ராஜா ஒரு சூழ்நிலையில் அலுவலகத்தை தன் வீடாகவே ஆக்கிக்கொண்டான். ராஜாவுக்கு பெண்கள் விஷயத்தில் அணைத்து சுகமும் எளிமையாக கிடைத்ததால் திருமண அசைக்கலையே விட்டுவிட்டான். கடினமாக உழைக்க வேண்டியது பல வழியில் பணம் சம்பாதிக்க வேண்டியது அந்த பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து அளிக்க வேண்டியது இப்படியே வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ராஜாவின் தொந்தரவால் கண்ணீர் விட பெண்கள் அதிகம். இப்படி ராஜா ஒரு பக்கம் காமத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். மற்றொருபக்கம் ராஜா பணிக்கு சேர்த்த பெண் முதலாளியை கைக்குள் போட்டுக்கொண்டு அடிக்கடி காம உறவுகள் அரங்கேறியது. ஒரு கட்டத்தில் முதலாளியின் உதவி பணிப்பெண் முதலாளியை மிரட்ட ஆரம்பித்தார்.
உடனே முதலாளி ராஜாவை கூப்பிட்டு முழுவிவரத்தையும் சொல்லி முடித்து வைக்கும்படி கூறியுள்ளார். உடனே ராஜா அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சில தொகையை கொடுத்து முடித்து வைத்தார். அந்த பெண்ணுக்கு கொடுத்த தொகையில் இருந்து ராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சுருட்டிக்கொண்டு. ராஜாவின் பெற்றோர்கள் ராஜாவிற்கு வயது அதிகம் ஆவதால் திருமணத்திற்கு எவ்வளவோ சொல்லியும் அவன் ஒத்து வரவில்லை. அவன் அப்பாவுக்கும் திடீரென்று இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார் சில தினங்களில் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். ராஜா அம்மாவோடு தனித்து வாழத் தொடங்கினான். சிறுது நாட்கள் துக்கம் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அந்த துக்கமும் மறைந்து மீண்டும் காமலீலைகள் ஈடுபட்டான். அவரது அட்டகாசங்கள் அளவுக்கு மீறி எல்லை இல்லாமல் இருந்தது. இறுதியாக அவன் ஒரு காம சைக்கோவாக மாறிவிட்டான். அவன் உடம்பு முழுவதும் காம ரத்தம்தான் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலம் பார்க்காமல் எந்த பணியாக இருந்தாலும் நம்பிக்கையோடு செய்து வந்ததால் தன் முதலாளியிடம் நம்பிக்கை பெற்றான். அதனால் தான் வைத்ததுதான் சட்டம் என்று அலுவலகத்தில் கொடிகட்டி பரந்தன். அலுவலகத்தில் ராஜா தன் ஆசைக்கு இணங்காத பெண்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான் இது அவரது வாடிக்கையாக இருந்தது. எப்பொழுதும் அலுவலகத்தில் தனக்கு இரண்டு செட் துணிகள் வைத்திருந்தான். இரவு நேரம் கூட பார்க்காமல் வேலை செய்வான். அதனால் முதலாளியிடம் நல்ல பெயர் கிடைத்தது அதை பயன்படுத்தி பல தவறுகள் செய்தான். இப்படி அவன் செயல்கள் சாதாரணமாக இருந்தாலும் அனைத்து தவறுகளும் மிகவும் கொடுமையானது.
மீண்டும் ஆவணத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி திருமணம் செய்து கொள் என்றார் ஆனால் அவர் அதையும் கேட்கவில்லை. ஏனென்றால் அவனுக்கு தேவையான அனைத்தையும் அவன் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டார் மேலும் பணம் கொடுத்து விபச்சாரத்தில் பெற்றுக்கொண்டான். ராஜாவிற்கு வயது அதிகரிக்க உடல் தளர ஆரம்பித்தன. அவனை எதிர்க்க எந்த பெண்ணும் முன்வராததால் அவன் காய் ஓங்கி காணப்பட்டது அவன் வைத்ததுதான் சட்டமாக இருந்தது அலுவலகத்தில். ராஜா அடிக்கடி பெண்களை பணியில் இருந்து நீக்குவது மீண்டும் புது பெண்களை பணிக்கு எடுப்பது என்று தன் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று ராஜாவின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமானது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உடல் நிலை மிக மோசமாக சென்று உயிர் பிரிந்தது. இப்பொழுது ராஜாவுக்கு இருந்த ஒரு துணையும் கைநழுவி போனது. தனித்து விடப்பட்ட தனிமரமாக வளம் வந்தான். சில தினங்கள் அம்மாவின் துக்கம் இருந்தன அதன் பிறகும் அவன் வேலைகளை காட்ட ஆரம்பித்துவிட்டான்.

ராஜாவுக்கு அவரது நிறுவனத்தில் இருந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு கொடுத்தது. அதன்படி சில தினங்களில் வெளிநாட்டு சென்றான் ஆனால் வெளிநாட்டில் அவன் சபல புத்தியை காண்பித்தான். வெளிநாடு சென்றதால் அவனிடம் அதிக பணம் புழக்கம் அதிகம் இருந்தது. வெளிநாட்டு வெளி சில தினங்களில் முடிந்து மீண்டும் ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் அலுவலகம் வர ஆரம்பித்தான் எப்பொழுது பெண்களை மட்டும் தொந்தரவு செய்பவன் சமீப காலமாக தான் சொல்வதை கேட்காத ஆண் நபர்களையும் பழிவாங்க ஆரம்பித்தான். தன் அதிகாரத்தால் பலரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பினான். ஆனால் ராஜாவுக்கு சாபம் மேல் சாபம் வந்து சேர்ந்தது. ஆனால் ராஜா முழு அதிகாரத் திமிரில் இருந்ததால் அவருக்கு அவைகள் பெரிதாக தெரியவில்லை.
அவன் பணி செய்து வரும் நிறுவனம் விற்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடித்து நல்ல விலைக்கு நிறுவனம் வேறு ஒருவருக்கு கைமாறியது. கை மாறியவுடன் புதிய நிர்வாகம் புதிய ஆட்களை பணிக்கு அமர்த்துவது.
புதிதாக வந்த நிர்வாகத்தின் முக்கிய புள்ளிகள் ராஜாவின் செயல்பாட்டை ஆதாரத்துடன் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர் அவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் விசாரணையின் பேரில் ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. நிர்வாகம் ராஜாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக ராஜா குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்ட வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பினார். வயது அதிகம் ஆகிவிட்டது வேலை கிடைக்காமல் தடுமாறினான்.
அதே சமயத்தில் அவரது பெண் மோகம் குறையவில்லை. தன் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு பல பெண்களிடம் பாலியல் உறவு கொண்டான். தவறான வழியில் சென்றதால் பணம் அனைத்தும் தண்ணீராக கரைந்தது. பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. பல ஆண்டுகள் சேமித்த PF பணத்தை எடுக்க விண்ணப்பித்து அந்த பணத்தையும் முழுமையாக கேட்டு விளையாட ஆரம்பித்தான். அந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அளித்துக்கொண்டிருந்தாள். அவரது உடல் மிகவும் மெலிந்து. சில நேரங்களில் மயக்கம் வருவதை உணர்ந்தேன். தனக்கு ஏற்பட்ட பயத்தில் மருத்துவரிடம் சென்றேன்.
மருத்துவர் அனைத்து பரிசோதனைகளையும் செய்து விட்டு முடிவை அவனிடம் தெரிவித்தார் உனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. மிகவும் அதிகம் உடலில் பரவி விட்டது இன்னும் சில நாட்களே உன்னால் உயிர் வாழ முடியும் என்றார். ராஜா தான் செய்த பல தவறுகளுக்கு மனிதனால் தண்டிக்க படாவிட்டாலும் பலரது குறிப்பாக பெண்கள் சாபத்தால் தன் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளான். தவறு செய்பவர்கள் யாரும் ஆண்டவன் பிடியில் இருந்து தப்ப முடியாது. நீ முற்காலத்தில் மாயையால் ஆடும் ஆட்டத்துக்கு இறுதிக்காலத்தில் கர்மா வந்து சேரும் என்பதை


முத்துக்குமரன் P கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே