Niranmani- கருத்துகள்

நன்றி தோழியே!
உமக்கும் என் வாழ்த்துக்கள்!!

நன்றி தோழமையே!
காத்துக்கொண்டுதானிருக்கிறேன் !!

மனம் கவர்ந்த வரிகள்..இனிமை !!

வணக்கம் !!
அன்புடன் நன்றிகள் ஐயா !

இதயம்
துடித்தது
உனக்காக

நீ போனபின்பு
துடிப்பது
எதற்காக..

எல்லாமும்
எனக்கு
நீயானாய்
இன்று
என்னையே
எரிக்கின்ற
தீயானாய்...


அருமை !!!!

பொழைக்கத் தெரியாத புள்ளையா இருக்கியே..
இதெல்லாம் ரகசியமா வச்சுக்கிட வேண்டாமா !
அட போப்பா ..! என்னத்த சொல்ல ..
அருமையா இருக்கு !!!

அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று .
படைப்பிற்கு நன்றி !

நாம் ஆண்டவர்கள் நம்மை ஆளலாமோ ? குமரிக்கண்டம் புதைந்தால் என்ன?
குமுறி வெடிக்கட்டும் வீரம் ! ..

வீரக் கவியே வணங்குகிறோம் !!!

உம்மைத் தான் எதிபார்த்துக் கொண்டிருந்தோம் ! அற்புதம் !!
வாழிய நின் புலமை !!!

அருமை .. இருந்தும் சிறு வேண்டுகோள் !

எழுத்துக்களுக்கும், மொழிக்கும் மண்டியிட வேண்டியதில்லை நாம் ஏனெனில் ..
அன்றும் இன்றும் என்றும் யார் துணையுமின்றித் தனித் தியங்கக் கூடியது நம் தனிப் பெருஞ் செந்தமிழ் !!!

வாழி நீவிர் பல்லாண்டு !

எங்கும் தமிழே .. யாவும் தமிழே !
வாழிய நம் தமிழ்ப் பற்று !!!

வருணிக்க வார்த்தைகள் இல்லை ,
அவ்வளவு அருமை ..
ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்ட உணர்வு !
--இனியோரு வாழ்வு இப்படி வாழத்தான் வழியில்லையே !!

தமிழ் எனும் மந்திரச் சொல் எப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது !
எம் இதயத்தில் .. அது எங்கும் ஒலிக்க
வேண்டுகிறேன் !!!

அருமை !

மிக்க நன்றி நண்பரே ..
தங்களது வரவிற்கும் கருத்திற்கும் !

ஒன்றுபடு ! வென்று எடு !
(பொங்கல் கவிதை போட்டி )
....................................................
கலிங்கம் வென்று கடாரம் கொண்டான்
கல்லணை கட்டிக் காவிரி ஆண்டான் !
தமிழன் என்பது பழங்கதையாக ..

ஈகை அன்பு மானமிழந்து ..
ஆங்கிலம் என்னும் எச்சில் வடித்து ..
அயலான் காலைக் கழுவிக் குடித்து
ஊனைப் பெருக்கி உடலை வளர்த்து
வாழ்வதென்பதே வாடிக்கையாக ..

பழமை மறந்து பெருமையிழந்து ..
பக்கத்துக்கு வீட்டுப் பகையை வளர்த்து
ஒற்றுமையின்றி சிதறிக் கிடக்கும் என் ..

தன்னிகரில்லாத் தமிழினமே நீயில்லா ..
நாடில்லை உனக்கென்று ஓர் நாடில்லை
காரணம் உனக்குள் ஒற்றுமையில்லை !

முப்படை கண்ட தலைமகனை ..
முப்பது ஆண்டுகள் தவிக்கவிட்டாய்
முள்ளிவாய்க்காலில் தொலைத்து விட்டாய்
ஈழத் தமிழனை ஈனத் தமிழன் ஆக்கிவிட்டாய் !

இனியும் நீ தாமதித்தால் காவிரி தடுக்கப்படும் ,
முல்லைப் பெரியாறு உடைக்கப்படும் உன்
வாழ்வாதாரம் பறிக்கப்படும் வாழ்விழந்தோர்
வரலாறாய் உன் வாழ்வு பொறிக்கப்படும் !
ஆகவே ஒன்றுபடு ! வென்று எடு !

தித்திக்கும் செந்தமிழாய்
திகட்டாத செங்கரும்பாய்
இனிதான வாழ்வு அமைய ..

குன்றாத வளமுடனும்
குறுகாத புகழுடனும்
நீடித்த ஆயுளுடன்
நிலையான வாழ்வு அமைய ..

இணைந்து வாழ்வதிலே
இணையில்லாப் புகழ்பெற்ற
அன்றில் பறவைகளாய்
அனுதினமும் வாழ்ந்திடவே ..

அகமாற வேண்டுகிறேன் !!!

வாழ்த்தும் வயதிற்கின்னும்
வரவில்லையென்பதால் !



உண்மைதான் ஐயா !
இந்நிலை மாறும் இனி நம்மால் ..!

மூழ்கியபின் முத்தைக் கொடுக்கும் _

நானும் மூச்சுத் திணறி
முத்துக் குளித்துவிட்டேன் ..
இது அழகான மணி முத்து தான் .


Niranmani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே