உயிரில்லா ஓவியமாய் நான்..!!!

நிழலே நிழலே நீ சொல்லு,
நான் இருப்பது நிஜமா பொய்யா..!!
நிஜமென நீ சொல்லிவிட்டால்
அதை பொய்யாக்கி விடுவேன்..!!

உனை என்னோடு நான் புதைத்தேனே,
என்னுள் உனை மறைத்தேனே,
நீ என்னை விட்டு எங்கோ சென்றாய்
போதும் போதும் நான் பாவமாய் நிற்கிறேன்..!!

காற்றின் வழி தென்றலாக வந்தாள்,
மூச்சின் வழி என்னுயிர் கலந்தாள்,
திரும்பி போகையிலே கையில்
என்னுயிர் எடுத்து போனாளே...!!
சிரித்து கொண்டே நான் அனுப்பி வைத்தேன்
அவள் சிதறி போன உயிர் எடுத்து வைத்தேன்..!!

தேவதை அவள் கனவினை தந்தாள்,
கனவை தந்து கற்பனை தின்றாள்,
நிஜத்தினில் வராமல்
நினைவுகளை அழித்தாள்...!!
அழிந்த நினைவை அவள் திருடி சென்றாள்,
திருடிய தடத்தையும் மறைத்து விட்டாள்..!!

உயிர் திருடிய அவளால்,
உயிரில்லா ஓவியமாய் நான்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (23-Feb-13, 1:32 pm)
பார்வை : 200

மேலே