பவர் கட்

மாப்பிளை கண்டு , உறவினர்கள் கொண்டு , காதல் மனம் கண்டு,

விருந்தினர்கள் பலர் வந்து , நிச்சய வேளையில்,

அழையா விருந்தாளி , சொல் இல்லாமல் சென்றதால்,

உலகம் இருண்டு, மணம் காண மன்னவனின்,

அம்மாவின் அவச்சொல் ஏற்று , கண்ணீர் பெருகி ,

காலம் சுழன்று , மனத்தெளிவு வந்தது !



ராக்கெட் காலத்தில் சகுனம் பார்க்கும் வீணர்களும் ,

அதே காலத்தில் , அடிக்கடி ஆகும் ”பவர் கட்’ - லும்

ஊசலாடுகிறது பல பெண்களின் மண வாழ்கை !!!

-பாரதி கண்ணன்
First published in my private blog

எழுதியவர் : பாரதி கண்ணன் (15-Jan-13, 10:40 pm)
சேர்த்தது : பாரதி கண்ணன்
பார்வை : 171

மேலே