தாயின் சொல்லை கேள்
புத்தி கெட்டு திரியாதடா ராசா
அடே புத்தி கெட்டு திரியாதடா ராசா
பெத்த தாயி சொன்னதை நீ கேட்கனும்
அவ மனசு குளிர நீ நடக்கனும்
முன்னேற்றம் வெகு தூரம் இல்லை
அது உன் முன்னாடி இருக்குது
அதுக்கு நீ உழைக்கனும் இல்லன்னா
காலமெல்லாம் கண்ணீர் வடிக்கனும்
தோள்மீது தொட்டில் கட்டி மார்மீது
மஞ்சம் இட்டு உன்னை வளர்த்த
தாயின் கனவுகளை கலைக்கலாம
பெத்த தாயின் சொல்லை கேள்
கோவை உதயன்