நெஞ்சம் வாடி உன்னைத்தேடும்...!!!

பிள்ளைத்தமிழில் பேசும் நிலவே
முல்லை மலரே முகம் காட்டு
கொள்ளைகொள்ளும் இனியதமிழே
வெள்ளை மனதை நீ காட்டு

மெல்ல மெல்ல நெருங்க நானும்
மேகமாக போகிறாயே நீயும்
சொல்லச்சொல்ல நாவில் ஊறும்
செந்தமிழோ என்னை ஆளும்

எண்ணச் சிறகில் ஏறி நித்தம்
எழுத்தில் கவியாய் வாழும்
வண்ணக் கோலம் போடும்
வானவில்லாய் உந்தன் ஜாலம்

புண்ணாய் எந்தன் நெஞ்சம் வாட
பூவாய் உந்தன் அன்பைத் தேட
பெண்ணாய் இங்கு பூத்திருக்கும்
பேதை உள்ளம் உன்னைப்பாடும்

எழுதியவர் : (1-Feb-13, 9:15 pm)
சேர்த்தது : மலைமகள்
பார்வை : 117

மேலே