மறக்கப்பட்ட மகனின் உறவு

சிறு வயதில் மன நோயாளியாய் இருந்து பிறகு பெற்றோரின் உதவியால் குணமடைந்து நன்கு பயின்று வேளையில் சேர்ந்து வசதியான பிறகு தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான் .
தோளில் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த மகனின் இதயம் மரத்துப் போனதால் ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி பரிதவிக்கிறார்கள்......
தயவு செய்து பெற்றவர்களை புலம்பவிடாதிர்கள் !

திட்டி
துரத்தி அடித்து
ஆடைகள் கிழித்து
உணவுகள் ஊட்டிய
முகத்தினை எட்டி மிதித்து
மூலையில் கிடந்தாய்
மனநோயாளியாய்
வட்டிக்கு வாங்கி
வைத்தியம் செய்தோம்
அன்று

அரண்மனை போல் வீடு
வேலைக்கு ஆள்
கழிப்பறையிலும் குளிர்சாதனம்
என்று
கரன்சியில் படுத்துரளும்
நீ
தவிக்க விட்டாய்
எங்களை
முதியோர் இல்லத்தில்
இன்று

எழுதியவர் : திருக்குமரன்.வே (21-Feb-13, 5:21 pm)
பார்வை : 116

மேலே