ஓடப்பர் ? 25

ஆண்ட சமூகம் மாண்டதப்பா.
காடையர் சமூகம் கொண்டாடுதப்பா.

கரங்கள் செயலற்று தொங்குதப்பா.
உறவுகள் உயிரற்று குவிந்தப்பா,

கடிதம் எழுதி
எழுதி கலைஞர்
கையும் ஓய்ந்ததப்பா,
புத்தம் பேசிய
காடயரின்
ரத்தவெறி தீர்ந்ததப்பா,

மயிலே இறகு
போடு என்றால்
போடாதப்பா,
தலையில் ஒரு
போடு போட்டால்
தானே இறகு
போடுமப்பா,

ஓடப்பர் எல்லாம்
உதையப்பர் ஆனால்
ஒப்பப்பர் ஆவார் உணரப்பா.

உண்மைதனை
உணராதானை உதைத்தால்
தப்பாப்பா ?

ஜோசப் கிரகரி ரூபன்.
23.02.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (23-Feb-13, 10:24 am)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 122

மேலே