அம்மா

அன்பின் முகவரி அம்மாதான்
அன்பின் அகராதியும் அம்மாதான்
அன்புகொண்டு அரவணைக்கும்
அன்னையும் அம்மாதான்
ஆறுதல் சொல்லி
அறுசுவையுட்டும் அன்னையும் அம்மாதான்

அன்பின் அழகு என்று
பண்புகொண்ட பாசம் அம்மாதான்
ஆலயம் தேவை இல்லை என்று
ஆள்கின்ற அன்னையும் அம்மாதான்
மனையிலே மங்காத தெய்வம் என்று
மனதிலே குடிகொண்டு மகிழ்வதும் அம்மாதான்

தாய் என்று தலைவணங்கி
தலைப்பெடுத்து படிபெடுப்பது அம்மாதான்
அகிலம் ஆள்கின்ற அன்னையும் அம்மாதான்
ஆரிராரோ பாடி அரவணைக்கும்
அன்னையும் அம்மாதான்

தரணியில் தாயென்ற தங்கமும் அம்மாதான்
பொறுத்தாலும் போக்கிசமும் அம்மாதான்
பொறுமை கொண்டு பெருமை சேர்க்கும்
பெரும் தெய்வமும் அம்மாதான்,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (4-Apr-13, 12:54 am)
பார்வை : 205

மேலே