தோத்தாங்கோலி
முதல் முறையாக எனக்குள் எரியும் தீயை அணைக்க எத்தனிக்கிறேன்!
முடியவில்லை...!
எரித்துக்கொண்டிருகிறார்கள் என்னை - சுடுகாட்டில்!!
இதுவரை அவமானங்களையும் , கவலைகளையும் இயலாமையையும் மட்டுமே பசியாற்றிக்கொண்டிருந்த நான்,
இன்று இறுதியாய் தீக்கும் பசியாற்றுகிறேன்..!!
இதுவரை தோல்வி மட்டுமே என்னை வென்றுள்ளது!
என் மனமென்னும் பூமியில் இன்ப மழை பொழிந்ததே இல்லை.!
வாழ்க்கை படகில் வெற்றிக் கரையை அடைந்ததே இல்லை.!
என் நண்பன் 'ஏமாற்றமும்' என் நெருங்கிய நண்பன் 'தோல்வியும்' என்னை பார்த்து ஏளனமாய் நகைத்துக்கொண்டிருகிரர்கள்..!!
இதோ எரிந்து முடிந்து விட்டேன்..!!