சாபம்

புள்ளியில் தான்
தொடங்குகிறது
ஒரு கோபம்....
பெரும் தீக் குளம்பின்
வடிவத்தில்
வழிகிறது வாழ்வெங்கும்......

இன்னதென்று தெரியாமல்
ஏதோ ஒரு
மாய பேய்
மௌனமாய்
பட்டாசு வெடிக்கிறது....
சிலபோது காரி உமிழ்கிறது....
கண்ணாடியில்.....

பிம்பங்களை
உடைத்த பின்னும்
ரம்பங்களை
அறுத்த பின்னும்
துன்பங்கள்
சூழ்ந்த பின்னும்.
மின் கம்பமாய் வெடிக்கிறது
மாய மனது..... அதில்
காயம் விழுது.......

ஏதாவது செய்...
இல்லையெனில்
ஏழாவது உலகில்
ஏழாவது அறிவாளியாய்
வாழ்ந்து கிடக்க
சாபம் தா....

மானுடமே....

எழுதியவர் : கவிஜி (12-Apr-13, 1:32 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 97

மேலே