விரும்புபவரை மதித்திடுவோம்

மழலையிடம் விளையாட்டா
மழலைகள் விளையாடுதா ?
ஐந்தறிவின் ஆசிகளை கேட்டு
ஆறறிவு அடக்கமாய் பெறுகிறதா ?
வையத்தில் நாம் எல்லாம் பிறப்பில்
வாழும்வரை உயிர்தான் என்கிறதா ?
நன்றி உணர்ச்சியின் சின்னம் நான்
நீயும் பெறுக என்று வாழ்த்துகிறதா ?
வாழும்வரை நமக்காக வாழுமன்றோ
உள்ளவரை நமை காத்திடும் அன்றோ !
வளர்ப்பவனை பெற்றவனாய் கருதும் நாய்
பெற்றவரை எதிரியாய் நினைத்திடும் நாம் !
நமை விரும்புபவரை நாம் மதித்திடுவோம்
நமை மதிப்பவரை நாம் விரும்பிடுவோம் !
என்றும் நன்றி உணர்வுடன்
பழனி குமார்