தன்வினை தன்னை சுடும்
வெப்பசலனங்களில்
வெந்து தணிகிறது
காடு-.
வேடந்தாங்கலுக்கு
தாகம் வரவே
விலாசம் மாற்றிக் கொண்டன
பறவைகள்-.
ஓசோன் மண்டலத்தில்
ஓட்டை போட்டுவிட்டு
உடம்பு குளிர்ச்சிக்கு
ஊட்டி போனான்
அறிவிழந்த அறிவானந்தம்-
கேலியுடன் சிரித்தன
காட்டு மரங்கள்!!!.