காதல் கிறுக்கு...!

அவளின் அழகில்
நான் நனைந்தேன்.
என் நிலையை
அவள் உணர்ந்தாள்..!

அவளின் வழியில்
விழியை வைத்தேன் .
என் மனதில்
அவளை தந்தாள்..!

அவளை நினைத்து
என்னை மறந்தேன்.
என் கனவில்
அவளே வந்தாள்..!

கனவை விட்டு
கண்ணை திறந்தேன்.
என் முன்னே
அவளே நின்றாள்..!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (1-Dec-10, 9:56 am)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 593

மேலே