நாம் தேடுகின்றோம்

பணம் என்ற சந்தையில்
விலையானோம்...!
பணம் நம்மை ஆளுதா ?
நம்மை பணம் ஆளுதா?
யார் ஆளவேண்டும் யாரை ....?!

மூழ்கி விட்டோம்
தாய் பாலை மறந்து
பண்பாட்டை மறந்து
அந்நிய வேலியிடம்
பணத்திற்காக ....!

தண்டனை பெற்றோம்
அறவழி அறிவை
இழந்து விட்டோம்
தஞ்சம் புக வழியின்றி
'அனைவரும் சமம்'
என்ற போர்வையில் .....!

சமாதியானோம்
புரியா வேலையில்
பிரியா மன வாழ்வை
அடகு வைத்து
உறைய வைத்து
விழிகளைத் தேடுகிறோம்
போகும் பாதை எது
எனத் தெரியாமல் ....!

சிக்குண்டோம்
மனசாட்சியை விட்டு
பறக்கவும் முடியாமல்
திசையும் தெரியாமல்
சிதைந்த சிறகுகளாய் ....!

எதிர் நீச்சல் போட
எண்ணங்களையெல்லாம்
நூல் நூற்று சிதறிய பட்டங்களாய்
தினமும் தேடுகின்றோம்
இனிமையான வாழ்வை
அகன்ற வான் முழுதும் ....!

இணைந்துவிட்டோம்
வாயில்லா ஜீவன்களாய்
தேடுகின்றோம் அன்று முதல்
இன்று வரை ஒவ்வொரு திசையிலும்
மலைக்கின்றோம் தவிக்கின்றோம்
விடையும் வழியும் தெரியாமல் ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (27-Apr-13, 7:12 am)
பார்வை : 79

மேலே