மூன்றே மூன்று மட்டும்!!!

மூன்றே மூன்று மட்டும்!!!

சிந்தனை பட்டு சீர்கெட்டு
நிந்தனைக்குட்டும் பெற்று
சிதைந்த பிணமாய் நீயும்
வாழ்வதற்கோ---ஈன்றாள்
உந்தனை! உணர்வாயோ!
உணர்ந்தும் திருந்துவாயோ!
கந்தையே! கசடனே! குடிகாரனே!
=================================================
மக்களை மாக்களாக்கி
மதிகெடுத்து கதியதுவாக்கி
ஏவலாக்கி வாழ்கிறீர்----இவர்
வருந்தினாலும் திருந்தினாலும்
வாழ்க்கை உமக்கேது!
இருந்திடட்டும் தொண்டர்கள் இப்படியே!
===================================================
வெள்ளையரிடம் பெற்ற
சுதந்திரம் சிக்கயதோ
பாவம் கொள்ளையரிடம்!
அள்ளுகிறார் அவரே------மிஞ்சுமோ
கல்லும்மண்ணும் குடிசைவாழும்
அப்பாவியற்கும்!சொல்லுங்கள்
சனநாயக சமுதாயமே!
=====================================================


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (4-May-13, 11:34 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 90

மேலே