மனிதனாய் இரு .
மானிடனே !
அழுகின்ற நிலை வந்தால்
அந்த இடத்தில்
நீ வானமாய் இரு !
தொழுகின்ற நிலை வந்தால்
அந்த இடத்தில்
நீ ஒரு பக்தனாய் இரு !
விழுகின்ற நிலை வந்தால்
அந்த இடத்தில்
நீ ஒரு பழமாய் இரு !
உதிர்கின்ற நிலை வந்தால்
அந்த இடத்தில்
நீ பூக்களாய் இரு !
தருகின்ற நிலை வந்தால்
அந்த இடத்தில்
நீ தானமாய் இரு !
ஆத்திரபடுகின்ற நிலை வந்தால்
அந்த இடத்தில் நீ ஒரு
நிதானமாய்
ஆராய்ந்து பார்க்கும்
நல்ல மனிதனாய் இரு .
*****************************************
நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்