உயிரையும் உருக்குலைக்கிறது

வாழ்க்கை நந்தவனத்தில்
காதலனாய் நுழைந்தாய்
ஆறுதல் தந்தாய்
வசந்தம் கண்டேன்
அன்பு தந்தாய்
ஆனந்தமடைந்தேன்
சின்ன சின்ன சண்டைகள்
அன்பின் ஆழமுனர்ந்தேன்
இன்று காரணமில்லாமல்
என்னை விட்டு நீ
கண் காணா தூரம்
சென்றுவிட்டாய் ஏனோ
கலங்கி போனேன் நான்
போன தடயம் இருக்கிறது
என் மனதில் நினைவுகளாக
பிரிவு தற்காலிகமா நிரந்தரமா
என்ற வினாவுக்கு விடை
தெரியாது விக்கித்து நிற்கின்றேன்
காதல் பிரிவு இத்தனை
வலி கொண்டதா ஏங்குகின்றேன்
நம் அன்பின் விலகல்
உயிரையும் உருக்குலைக்கிறது.....................!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (12-Dec-10, 8:35 am)
சேர்த்தது : renga
பார்வை : 372

மேலே