உனக்கு நீயே போடும் வேலி - ஒழுக்கம் ஒன்றுக்காக மட்டும் இருக்கட்டும்
முட்டி மோதியே உடைத்தாய் - நீ
தத்தி தத்தியே நடந்தாய்.....! அந்த
முயற்சியை ஏனடா தொலைத்தாய் - நீ
மூலையில் முடங்கி ஏன் கிடந்தாய்...!
அசைந்திடு சக்தி உனக்குண்டு
அடடா அழுவதை நிறுத்து.....!
பந்தாடு பூமியை சிரித்து - உனக்கு நீயே
போட்ட வேலியை உடைத்து...!