உரையாடல் அது உறவாடல் !

கணவன் : நீ அழகி
மனைவி : மகிழ்ச்சி என்றால்
கணவன் : நீ பேரழகி !
மனைவி : மன்னவன் சொல் மறுப்பதற்கில்லை !
கணவன் : நீ புதுக்கவிதை என்றேன் !
மனைவி : எதுகை , மோனை எடுத்து வராதீர் !
கணவன் : புரியவில்லை என்றேன் !
மனைவி : அதுவரைக்கும் சுகம் என்றால்!
கணவன் : உனக்கொரு தாஜ்மஹால் .......!
மனைவி : வாழும்போது குடிசை என்றாலும்
இன்பமாக வாழ்வோம் . நான் இல்லாத மஹால் எதற்கு ?
கணவன் : நீ அறுசுவை !
மனைவி : என் சமையல் சுவை இல்லை என்று வஞ்சபுகழ்ச்சியோ என்றால் !
கணவன் : கோபமா ?
மனைவி : இல்லை .குழப்பம் !
கணவன் : கையிலிருந்த அரைமுழம் பூவை
கொடுக்க ....
மனைவி : பக்கம் நின்ற வெட்கத்தில் ...!
முகம் சிவக்க .....!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (3-Sep-13, 4:13 pm)
பார்வை : 76

மேலே