இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும்
பொழுது கொள்ளைக்காரன் " யாரும்
நகராதீர்கள், பணம் நாட்டினுடையது,
உங்கள் உயிர் உங்களுடையது "
என்றான்..

எனவே அனைவரும் அமைதியாக
இருந்தனர், இது தான் "மனம் மாற்றும்
கருத்து ".

ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள் ,
ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க
வரவில்லை கொள்ளையடிக்க
வந்திருக்கிறோம் , ஒழுங்காய்
கீழே உக்காரு " என்றான்.

இது தான் "தொழில் முறை யுக்தி",
கவனம் சிதறாமல் இருப்பதற்கு.
கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும்
போது ஒருத்தன் கேட்டான்
"எவ்வளவு பணம்
இருக்குது னு எண்ணுவோம்".
இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல
நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான்.

இது தான் "அனுபவம்" என்பது, திறமைகளை விட பெரியது.

அவர்கள் கொள்ளை அடித்து சென்ற
பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம்
காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்
என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10
கோடி எடுத்துட்டு, மொத்தம் 50
கோடின்னு கணக்கு சொல்லிடலாம்"
என்றான்.

இது தான் "அலைகளை நோக்கி நீந்து"என்பது.

அதை கேட்டு மேலாளர் சொன்னார்,
"மாதா மாதம் கொள்ளை நடந்தால்
நல்லா இருக்கும்

" இது தான் "அலுப்பின்
வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.

மறுநாள் டிவி'யில் 100
கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது.
அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன்
"நாங்கள் உயிரை பணயம் வைத்து 30
கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால்
அவர்கள் 70
கோடி கொள்ளை அடித்துவிட்டனர் ,
கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்"

இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது"
என்று சொல்லப்படுகிறது

அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக
இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான்
இழந்த பங்கு சந்தையை மீட்டார்.

இது தான் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது.

இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (11-Sep-13, 4:56 pm)
பார்வை : 282

மேலே