கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

ஒரு நாள் அயல்நாட்டிலிருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களில் ஒருவர் முல்லாவை நோக்கி "முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யை காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறதே ஏன்?" எனக் கேட்டார்.

"நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தில் இரும்பைவிட தங்கத்திற்கு அதிக மதிப்பு இருக்கிறதே ஏன்?" என்று ஒரு சந்தேகம் கேட்டார்.

உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கும் கிடைக்கிறது அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது தங்கமோ உலகத்தில் அரிதாகத்தான் எங்காவது ஓரிடத்தில் கிடைக்கிறது. அதனால் தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக என்றார் ஒருவர்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களை கண்டுபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது என்று முல்லா சொன்னார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அவர்கள் இருவரும் மகிழ்ந்தனர்.

எழுதியவர் : படித்தது (12-Sep-13, 6:42 pm)
பார்வை : 238

மேலே