மணி ஓசை முன்னே மாடு வரும் பின்னே

ஆஹா
எத்தனை வடிவு ...
இது எம் வீதிதானா ...?
நேற்று வரை
குன்றும் குழியுமாக இருந்ததே
ஆனால் இன்று
எம் சமைலறையின் மாபில்கள்போல் ....

அட
எம் தெரு விளக்குகளா இவை ..?
இவைக்கும் ஒளிரத்தெரியுமா..
எத்தனை நாட்கள் அவைகள் ஒளிர்ந்து
இன்றுதான் அவற்றுக்கும் உயிர் வந்துள்ளன
ம்ம்ம்ம் ....

அட இங்கப்பாருடா
நம் தெரு குழாய்கிணறிலும் தண்ணீர் வருகுதே
மூச்சுபிடித்து எத்தனை முறை அடித்தாலும்
ஒரு துளி தண்ணீரை சிந்தாத கிணறா இது ...
ஆனால் இன்று
ஆச்சரியந்தான்

ஆனால்
ஏன் இந்த அதிசயம் ....?
இறந்த உடல் உயிர் பெற்றால் போல் ....
வாடிய மலர் வாசம் தந்தால் போல் ...

அன்பான வாக்காளப்பெறு மக்களே
என் தோழமைகளே .....
என் உயிரிலும் மேலான ....

அடடா இதுதான் விடயமா
அப்ப சரி
இன்னும் சில நாட்களுக்கு
நரகமும் சொர்க்கமாகத்தானே தெரியும்
எல்லாக்காலமும் தேர்தல் காலமாக இருந்தால் ....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ .மு (20-Sep-13, 9:47 pm)
பார்வை : 72

மேலே