அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கற்பனையை காதலித்து
எழுத்துக்களில் செதுக்கி
கருத்துக்களை ஆடையாக்கி
சொல்லாடலை அணிகலனாக்கி
நவீன கவிப் படைக்கும்
திருப்பூர் கவிஞனே !!!

கொடிக் காத்து மனதை
கொள்ளைக் கொண்டான்
திருப்பூர் குமரன்
அன்பு காட்டி மனங்களை
கொள்ளைக் கொள்ளும்
திருப்பூர் நாயகனே !!!

மட்டையை சுழற்றி
பந்தை விரட்டி சச்சின்
சாதனை படைத்தான்
கருத்தாக கவியெழுதி
கருத்துரைத்து தமிழ் பித்தனாகிய
திருப்பூர் சச்சினே !!!

புதிய அகவையில்
புயலாய் புகுந்து
வளங்களையும் நலன்களையும்
அகமகிழ பெற்று ஆயிரம்
ஆயிரம் ஆண்டுகள்
அகத்திலும் புறத்திலும்
சந்தோசத்துடன்
நல வாழ அண்ணன்
சந்தோஷ் குமாருக்கு எனது
அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!



[29-09-2013 அன்று பிறந்தநாள் காணும் எழுத்து தளத்தில் உள்ள அண்ணன் சந்தோஷ் குமார் அவர்களுக்கு எனது அம்மா தோழிகள் தோழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ]

எழுதியவர் : சுதா (28-Sep-13, 1:35 am)
சேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 36428

மேலே