மாலையும் மயங்கியது மேற்கு வானில்
மயங்கிக் கிடந்தது
வண்டு
மல்லிகை மலரினில்
மலர் மல்லிகை
மயங்கிக் கிடந்தது
மங்கையின் கூந்தலில்
மயங்கிச் சாய்திருந்தாள்
மங்கை
மன்னவன் தோளினில்
மாலையும் மயங்கியது
மேற்கு வானில்
மன்மத ராகம் பாடியது
மன்னவன் நெஞ்சினில்.
~~~கல்பனா பாரதி~~~