அம்மா

" அம்மா "
நீ என்னை பெரும் போது சத்தமிட்டு
வலியால் துடித்து கத்திய வார்த்தையிது...
உன் வலியை போக்க வேகமாய்
இந்த உலகை காண வெளிவந்து
" அம்மா " என்று உன்னை என் சின்னஞ்சிறு
அழுகையில் உன் வலியை நொடி
பொழுதில் மறக்க வைத்தேனே...!!!

10 மாதம் உன் கருவைரையில் எனை சுமந்தாய்
அம்மா...
இனி ஆயுள் முழுதும் உன்னை
நான் சுமக்க வேண்டும்..
என் நெஞ்சமென்னும் கருவறையில்..
வலிப்பட்டு விழும் போதெல்லாம்
உன் கரம் கொண்டு அணைத்து கொண்ட உன்னை என் மூச்சு நிற்கும் வரை
என் இமைக்குள்ளே பூட்டி வைத்து
உன்னை பாதுகாபெனம்மா..

வரிகளில் உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை..
உன் அன்புக்கு ஈடாய் என்னிடம் ஏதுமில்லை..
என் உயிருள்ள வரை உன் காலடியில்
என் சேவைகளை உனக்காய் சமர்பிக்கிறேனம்மா....

எழுதியவர் : ஜுபைடா (2-Oct-13, 9:37 am)
Tanglish : amma
பார்வை : 134

மேலே